? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 9:51-62

ஆண்டவரைப் பின்பற்று!

…நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக்கூடுகளும் உண்டு, மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார். லூக்கா 9:58

தேவனுடைய செய்தி:

கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல.

தியானம்:

சமாரியருடைய ஒரு கிராமத்து மக்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளாதபடியி னால், “எலியா செய்ததுபோல, வானத்திலிருந்து அக்கினி இறங்கி இவர்களை அழிக்கும்படி நாங்கள் கட்டளையிட உமக்குச் சித்தமா” என ஆண்டவரிடம் சீடர்கள் கேட்டனர். இயேசுவோ, “மனிதரை இரட்சிக்கவே நான் வந்தேன்” என்றார்.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

மனுஷகுமாரன் மனுஷருடைய ஜீவனை அழிக்கிறதற்கு அல்ல, இரட்சிக்கிறதற்கே வந்தார்.

பிரயோகப்படுத்தல் :

வசனம் 57ன்படி, “நீர் எங்குச் சென்றாலும் நானும் உம்மைப் பின்செல்வேன்”

என்று கூறியவனுக்கு இயேசு கூறிய பதில் என்ன?

வசனம் 59ன்படி, இயேசு ஒருவனை அழைக்கும்போது, அவன் கூறிய சாட்டுப்போக்கு அல்லது கடமை என்ன? இன்று எனது பதில் என்ன?

வசனம் 61ன்படி, முன்பு நான் போய், வீட்டிலிருக்கிறவர்களிடத்தில், சொல்லி விட்டுவர விடைதாரும்” என்றவனுக்கு இயேசு கூறிய பதில் என்ன?

இறந்தவர்கள் தங்கள் இறந்தோரை அடக்கம் செய்துகொள்ளட்டும். நீ போய் தேவ ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கி” என்று கூறுவதன் அவசரம் என்ன?

நான் தேவ ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவனாக இருக்கிறேனா?

எனது சிந்தனை:

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin