? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: லூக்கா 13:31-35

தேவனை அசட்டைபண்ணுவதா?

…பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன். உங்களுக்கோ மனதில்லாமற் போயிற்று. லூக்கா 13:34

தேவனுடைய செய்தி:

கோழி தன் குஞ்சுகளைத் தன்சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக் கொள்ளும் வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக் கொள்ள மனதாயிருந்தேன். (13:34)

தியானம்:

ஆட்சிப் பொறுப்பிலுள்ளவர்களுக்கு இயேசு பயப்படவில்லை. அவர்கள் தவறை சுட்டிக்காட்ட தவறவில்லை. தமது இவ்வுலக வாழ்வுக்கான நோக்கத்தை இயேசுவானவர் அறிந்தவராகவே செயற்பட்டார்.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

பாவமன்னிப்பையும் புதுவாழ்வையும் இளைப்பாறுதலையும் பெற்று, நரகம் என்ற பேராபத்திலிருந்து தப்பித்துக்கொள்ள இயேசு நம்மை எச்சரிக்கிறார். அழைக்கின்றார்.

பிரயோகப்படுத்தல் :

ஏரோது இயேசுவை கொலைசெய்ய மனதாயிருப்பதாக இயேசுவிடம் கூறிவர்கள் யார்? உண்மையில் ஏரோதுவை தூண்டிவிட்டது யாராக இருக்கக்கூடும்?

வசனம் 32,33ன்படி இயேசுவின் இவ்வுலக பணி எப்படிப்பட்டது?

எச்சரிப்பு சத்தத்தைக் கேட்கும் கோழிக்குஞ்சுகள் என்ன செய்யும்? நாம் என்ன செய்ய வேண்டும்? தாயின் சிறகுக்குள் ஓடிவராவிட்டால் அது யாருடைய தவறு?

 கிறிஸ்துவண்டை வராமல், சடங்காச்சார கிறிஸ்தவனாக வாழ்வதிலுள்ள ஆபத்து என்ன? அவர்கள் பேராபத்தில் சிக்கிக்கொள்வது ஏன்?

நரகம் செல்லாமலிருக்க, இயேசுவிடம் கிட்டி வருபவனுக்கு இயேசு தரும் அடைக்கலம் எப்படிப்பட்டது? அதை நீர் ருசிபார்த்ததுண்டா?

எனது சிந்தனை:

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin