? சத்தியவசனம் – இலங்கை. ??
? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 7:18-23
துன்பத்திலும் துணை அவரே
…என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் என்றார். லூக்கா 7:23
தேவனுடைய செய்தி:
இரட்சகராகிற இயேசு கிறிஸ்துவை தயக்கம் இன்றி ஏற்றுக்கொள்வோர் பாக்கியவான்கள்.
தியானம்:
“வர இருப்பவர் நீர்தானா? அல்லது வேறொருவரை எதிர்பார்க்க வேண்டுமா?” என யோவான் கேட்டதாக அவனது சீடர்கள் இயேசுவிடம் வந்து கேட்கின்றார்கள். அந்நேரத்தில் பிணிகளையும் நோய்களையும் பொல்லாத ஆவிகளையும் கொண்டிருந்த பலரை இயேசு குணமாக்கினார், பார்வையற்ற பலருக்குப் பார்வை அருளினார்.
விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:
இயேசு அறிவிப்பது நமது கடமை.
பிரயோகப்படுத்தல் :
இவற்றைக் குறித்து சிந்தியுங்கள்:
பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர்,
கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர்,
தொழுநோயாளிகள் நலமடைகின்றனர்,
காது கேளாதோர் கேட்கின்றனர்,
இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுகின்றனர்,
ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகின்றது.
நீங்கள் கண்டவற்றையும் கேட்டவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள் (7:22) இன்று நமது பணி என்ன?
“வருகிறவர் நீர்தானா?” என யோவான் மேசியாவைக் குறித்து சிந்தித்தபடி இன்றைய மக்கள் சிந்திக்கின்றார்களா? அவர்கள் இயேசுவை அறிந்து கொள்ள நாம் என்ன செய்யலாம்? என்ன செய்கின்றோம்?
? இன்றைய எனது சிந்தனை:
? அனுதினமும் தேவனுடன்.