2023 ஜுன் 11 ஞாயிறு

📖 சத்தியவசனம் – இலங்கை

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : 1சாமு 18:1-9

காய்மகாரம்

அந்நாள் முதற்கொண்டு சவுல் தாவீதைக் காய்மகாரமாய்ப் பார்த்தான்.
1சாமுவேல் 18:9

கர்த்தருடைய ஆவி சவுல் ராஜாவைவிட்டு விலகிய பின்னர், சவுல் கலக்கமடையும் போதெல்லாம் சுரமண்டலத்தை வாசித்து ஆறுதல் கொடுத்தவன் தாவீது (16:14,23) அப்படியிருந்தும், ராஜாவும் இராணுவமும் கோலியாத்துக்குப் பயந்து பின்வாங்கிய போது, ஒரு கவணில் கல் வைத்து அவனைக் கொன்றுபோட்ட தாவீதைக் காட்டி, “இவன் யார் மகன்” என்று கேட்கிறான் சவுல் (17:55-58). கோலியாத்தை வெற்றி கொண்டு ஜனங்கள் ஆரவாரத்துடன் திரும்பி வருகையில், அவர்கள் பாடிய பாடல் வரிகளே சவுலுடைய இருதயத்தில் எரிச்சல் மூட்டியது. “சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம்” என்று மூன்றுமுறை பாடினார்களாம். அந்நாள் முதற்கொண்டு சவுல் தாவீதின்மீது எரிச்சலடைந்திருந்தான்.

ஒரு பாடல், தாவீது செய்த அளப்பரிய நன்மையை சவுலுக்கு மறக்கச் செய்தது. “இன்னும் ராஜாங்கம் மாத்திரம் அவனுக்குக் குறைவாயிருக்கிறது” என்று சவுல் சொன்னதிலிருந்து, அவனுக்குள் எரிச்சல் வேரூன்றி வளர ரம்பித்துவிட்டிருந்தது. இதை அறியாத தாவீது வழமைபோல சுரமண்டலம் வாசித்தபோது, சவுல் தன் ஈட்டியை எறிந்து தாவீதை உருவக் குத்தப்பார்த்தான். இரண்டு தடவைகளாக தாவீது தப்பினான். மக்களின் ஆதரவையும் பிரியத்தையும் சம்பாதித்த தாவீது, தன்னையும் கொன்றுபோட்டு ராஜ்யத்தைக் கைப்பற்றி விடுவானோ என்று சவுல் தாவீதுக்குப் பயந்தான். இதைத் தொடர்ந்து, சவுல் தான் மரணிக்கும் வரைக்கும் தாவீதைக் கொன்றுபோடுவதற்காக, தன் ராஜ்ய அலுவல்களையும் விட்டு தாவீதைப் பின்தொடர்ந்து கொண்டிருந்தான். மனதில் தோன்றிய எரிச்சல் சவுலை எந்நிலைக்குக் கொண்டுவந்து விட்டுவிட்டது பார்த்தீர்களா! ஆனால், ஏற்கனவே கர்த்தர், ராஜ்ய பாரத்திலிருந்து சவுலைத் தள்ளி, சாமுவேல் மூலம் தாவீதை சகோதரர் நடுவே அபிஷேகம்பண்ணிவிட்டார் என்பதை இந்த சவுல் அறிந்திருக்க வாய்ப்பில்லை. உண்மையில் தாவீதுஇஸ்ரவேலுக்குப் பெற்றுக்கொடுத்த இந்தப் பெரிய வெற்றியைக் கொண்டாடவேண்டிய சவுலுக்குள் ஒரு பாடல் எரிச்சலை மூட்டிவிட்டது. எரிச்சல் கொலைசெய்யுமளவுக்கு சவுலை ஏவிவிட்டது என்றால் எரிச்சல் உணர்வை நாம் சாதாரணமாக எடைபோட முடியாது. அது கொலைபாதகத்துக்கு சற்றுத்தான் தள்ளி நிற்கிறது என்பதை இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.

நமக்குள் துளிர்விடும் எரிச்சல் பொறாமையை பெரிதாக நாம் வெளிக்காட்டுவதில்லை. நமக்குக் கீழ் உள்ளவர்கள் புகழப்படும்போது, உயர்த்தப்படும்போது நமது கட்டுபாட்டை யும் மீறி இந்த எரிச்சல் நமக்குள் எட்டிப்பார்த்துவிடும். இது கொடூர பாவம். அடுத்தவர் உயிரை எடுக்காவிட்டாலும், சகோதரனைப் பகைக்கிற கொலைபாதகத்துக்கு (1யோவா.3:15) ஆளாவோம். நம்மை ஆராய்ந்துபார்த்து தேவஅன்பினால் நிரம்புவோமாக.

💫 இன்றைய சிந்தனைக்கு: 

  எரிச்சல் குணம் கொலைக்கு நம்மை நடத்தினாலும், அது நம்மையும் கொன்றுபோடும் என்பதை என்னால் உணரமுடிகிறதா?

📘 அனுதினமும் தேவனுடன்.

24 thoughts on “2023 ஜுன் 11 ஞாயிறு

  1. На сайте https://ki-news.ru вы сможете ознакомиться с полезными, актуальными и свежими новостями Краснодара. Так вы узнаете о том, как правильно выбрать арбуз, по каким критериям это нужно сделать. Есть информация о том, какие льготы полагаются многодетным семьям, о курортах Кубани, о том, где вы сможете погулять с собаками. Имеется и раздел с наиболее актуальными новостями, которые касаются жителей города. Регулярно на сайте появляются новые, свежие данные. С ними необходимо знакомиться и вам.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Solverwp- WordPress Theme and Plugin