ஜுலை – ஆகஸ்ட் – செப்டெம்பர் சத்தியவசனம் சஞ்சிகை
திருப்தியுடன் ஜெபியுங்கள்.
நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன். (பிலிப்பியர் 4:11)
‘ஆண்டவரே, நான் எல்லா சூழ்நிலையிலும் திருப்தியாக இருப்பதற்காக நன்றி.”
பயமில்லாமல் ஜெபியுங்கள்.
கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்? கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர், யாருக்கு அஞ்சுவேன்? (சங்கீதம் 27:1)
‘உம்மைத்தவிர, எதற்கும் நான் பயப்படவேண்டியதில்லை. நன்றி ஆண்டவரே.”
இடைவிடாமல் ஜெபியுங்கள்.
இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள். எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ் செய்யுங்கள் (1தெசலோனிக்கேயர் 5:17,18)
‘ஆண்டவரே, எனது தேவைகளை நீர் சந்திப்பதற்காக நன்றி. சந்திக்கப்படாத தேவைகளுக்காக உம்மையே நோக்கிப் பார்க்கிறேன். ஆமென்.”
அன்புடன் ஜெபியுங்கள்.
உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களைச் ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள். (மத்தேயு 5:44)
‘ஆண்டவரே, நீர் அன்புகூரும் வண்ணமாக, நிபந்தனையின்றி, மற்றவர்கள் மேல் அன்பு பாராட்ட உதவிசெய்யும். ஆமென்.”
பாதுகாக்கப்பட்ட நாவினால் ஜெபியுங்கள்.
கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்த புறப்படவேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்.(எபேசியர் 4:29)
‘ஆண்டவரே, மற்றவர்களை நான் உருகுலைத்து விடாமல், கட்டியெழுப்பும்படியாக என் பேச்சைக் காத்துக்கொள்ள உதவும். ஆமென்.”
சுய மதிப்புடன் ஜெபியுங்கள்.
தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது. மேலும் சகல துரைத்தனங்களுக்கும் அதிகாரத்துக்கும் தலைவராயிருக்கிற அவருக்குள் நீங்கள் பரிபூரணமுள்ளவர் களாயிருக்கிறீர்கள். (கொலோசெயர் 2:10)
‘ஆண்டவரே, நான் முக்கியத்துவம் அடைவது உம்மாலேதான். அதற்காக நன்றி.”
முழு பெலத்துடன் ஜெபியுங்கள்.
உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர், அவர் அப்படியே செய்வார். (1தெசலோனிக்கேயர் 5:24)
‘நன்றி ஆண்டவரே, நீர் எதற்காக என்னை அழைத்தீரோ அதை நான் செய்துமுடிக்க உமது பெலனை தந்து உதவி செய்வதற்காக நன்றி.”
மக்களையும் அவர்கள் விருப்பத்தையும் பிரியப்படுத்த நினைக்காமல், உங்கள் பார்வையை ஆண்டவர் மேல் திருப்புங்கள்.