செப்டெம்பர் 19 செவ்வாய்

📖 சத்தியவசனம் – இலங்கை

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : எரே 29:1-14

ஜீவாகாரம்

…கர்த்தர் எரேமியா தீர்க்கதரிசியோடே சொல்லிய வருஷங்களின் தொகையைப் புஸ்தகங்களால் அறிந்துகொண்டேன். தானியேல் 9:2

பின்நாட்களில் நடக்கப்போவது என்ன என்பதை அறிவதற்கு ஆவல் இல்லாதவர்களே இல்லை எனலாம். அதில் தவறு இல்லை. ஆனால், அதை எங்கிருந்து அல்லது யாரிடமிருந்து அறிய முயற்சி செய்கிறோம் என்பதுவே மிக முக்கியமான காரியம்.

சிறைப்பட்டுப்போன தானியேல், சிறைவாச காலத்தைக்குறித்து அறிவதற்கு குறிசொல்கிறவர்களை நாடவில்லை. மாறாக, சிறைப்பட்டு பாபிலோனுக்குக் கொண்டு செல்லப்பட்டவர்களுக்கு எரேமியா தீர்க்கதரிசிமூலமாக கர்த்தர் சொன்ன வார்த்தைகளையே தேடி வாசித்து, அவைகளாலே தானியேலும் நண்பர்களும் தமது இருதயங்களை நிரப்பியிருந்தார்கள். பாபிலோனின் ஆற்றின் அருகே அழுதுகொண்டிராமல், பாபிலோனில் வீடுகளைக் கட்டி, தோட்டங்களை நாட்டி, விவாகம் செய்து, தம்மைச் சிறைப்படுத்திய பாபிலோனுக்காகவும் ஜெபித்துக்கொண்டு சாதாரண வாழ்வை வாழும் படியே கர்த்தர் சொல்லியிருந்தார். மாத்திரமல்ல, எழுபது வருஷம் நிறைவேறிய பின்பு,சமாதானத்துக்கேதுவான முடிவைத் தருவேன் என்றும் கர்த்தர் சொல்லியிருந்தார். கர்த்தர் சொன்னதைச் செய்வார்; சிறைவாசம் ஏன் வந்தது, அது எப்போது முடியும், மறுபடியும் எருசலேமுக்குக் கர்த்தர் கொண்டுவருவார் என்பதையெல்லாம் தானியேல் வாசித்தறிந்தது மாத்திரமல்ல, தேவனுடைய இந்த நல்வார்த்தைகளை விசுவாசித்து, அந்த அந்நிய தேசத்திலும் கர்த்தரையே சார்ந்திருந்தார். சூழ்நிலையின் நெருக்கத் தால் இந்த வார்த்தைகளை அவர் புறக்கணித்து விடவில்லை. அதனாலேயே, அந்த சிறைவாசத்திலும் அவரால் கர்த்தருக்கென்று உறுதியாக நிற்க முடிந்தது.

நமது ஆவிக்குரிய வாழ்வில் உட்கொள்ளும் திவ்ய ஜீவாகாரம் வருத்தத்தை ஏற்படுத்தாது, மாறாக, நித்திய பலனை அனுபவிக்க உதவிசெய்யும் என்பதை நாம் நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும். நம் வாழ்வுக்குரிய சகல நல் ஆலோசனைகளையும் தேவன் தமது திவ்ய வார்த்தையில் ஏற்கனவே தந்துவிட்டார். அவற்றைத் தேடி வாசித்து, அன்றாட பிரச்சனைகள், வரப்போகும் காரியங்கள் என யாவையும் அறிந்து, நமது இருதயத்தை அந்த வார்த்தையால் நிரப்பி நம்பிக்கையோடு வாழுவதைவிட்டு விட்டு, நம் நித்திய வாழ்வையே அழித்துப்போடக்கூடிய உலக அழுக்குகளால் நமது இருதயத்தை நிரப்புவது ஏன்? நெருக்கங்கள் சோதனைகள் நிறைந்த சூழ்நிலைகள் வந்தாலும், பாவம் நிறைந்த இவ்வுலகில் தேவனுக்கென்று உறுதியாக நிற்பதெப்படி என்பதையும் வேதவாக்கியங்களில் நாம் தெரிந்துகொள்ளலாம். தேவனுடைய வார்த்தை, அதுவே நமது ஜீவனுக்கு ஆகாரம். அதை உட்கொள்ளாவிட்டால் நமக்கும் ஆவிக்குரிய வருத்தம் வரத்தான் செய்யும்.

💫 இன்றைய சிந்தனைக்கு:

   எனது இருதயம் இன்று எதனால் நிறைந்திருக்கிறது? உலக காரியங்களாலா? வேதவாக்கியங்களாலா?

📘 அனுதினமும் தேவனுடன்.

7 thoughts on “செப்டெம்பர் 19 செவ்வாய்

  1. Use the 1xBet promo code – get a 100% welcome bonus up to €130 upon registration.1xbet free bets and T&Cs explained. Other bonuses can already be received during the game. The bookmaker offers free bets, cashback and insurance bets as incentives for players. Again, the way the bonus is applied, the wagering amounts and the wagering period are clearly stated in the terms and conditions of the promotion. 1x bet promocode There are several such offers that are always available for players.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Solverwp- WordPress Theme and Plugin