ஆகஸ்ட் 5 சனி

📖 சத்தியவசனம் – இலங்கை

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : பிலி 1:27-30

சுவிசேஷப் போராட்டம்

சுவிசேஷத்தின் விசுவாசத்திற்காகக் கூடப்போராடி, …கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குப் பாத்திரராக மாத்திரம் நடந்துகொள்ளுங்கள்.பிலிப்பியர் 1:27

தேவனுடைய செய்தி:

நற்செய்திக்குப் பொருந்துகிற வாழ்வை வாழ்வது பற்றி உறுதி செய்துகொள்ளுங்கள்.

தியானம்:

நற்செய்திக்கு எதிராக இருந்த மக்களை, பவுல் எதிர்கொள்ள நேர்ந்தபோராட்டங்களை பிலிப்பிய மக்கள் கண்டார்கள். இன்றும் திருச்சபைஎதிர்கொள்ளும் போராட்டங்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொள்வதற்கு மட்டும் அல்ல, அவருக்காகத் துன்பங்களை ஏற்பதற்கு இன்று நீங்களும் அருள் பெற்றுள்ளீர்கள்.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

கிறிஸ்து இயேசு தேவனுடைய மார்க்கத்தை தமது மரணத்திற்கூடாக தெளிவாகப் போதித்தார்.

பிரயோகப்படுத்தல் :

தேவன் ஒரு கிறிஸ்தவனுக்கு விசுவாசத்தையும் பாடனுபவித்தலையும் தருகிறார் என்பதைக் குறித்த உங்கள் கருத்து என்ன?

சுவிசேஷத்திற்காக தனியாக பிரயாசப்பட வேண்டுமா? அல்லது குழுவாக பிரயாசப்பட வேண்டுமா? எம்மோடு கூட போராடுபவர்கள் யார்?

சுவிசேஷம் உங்களுக்கு எவ்வளவு முக்கியம்? நம்மைச் சுற்றியுள்ள     மக்கள் இயேசுவைக் குறித்த உண்மையை அறிந்துகொள்ள நாம்                இணைந்திருப்பது எவ்வளவு முக்கியம்?

சாத்தான் சுவிசேஷத்திற்கு விரோதமானவனா? அவன் பக்கமுள்ள மக்கள் நற்செய்திக்கு எதிரானவர்களாக? அவர்களின் தாக்குதலுக்கு நாம் ஆளாக நேரிட்டால், என்ன சொல்வீர்கள்?

“போராட்டமே உங்களுக்கும் உண்டு” என்ற வசனம் 30ன் அர்த்தமென்ன? 

எனது சிந்தனை:

📘 அனுதினமும் தேவனுடன்.

7 thoughts on “ஆகஸ்ட் 5 சனி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Solverwp- WordPress Theme and Plugin