பெப்ரவரி 10 சனி

சத்தியவசனம் – இலங்கை இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : தீத்து 2:12-15 கிறிஸ்துவின் வருகை தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, …இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப் பெறக்காத்திருங்கள். யூதா 21 தேவனுடைய செய்தி: நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியத்துக்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி வசனம் நமக்குப் போதிக்கிறது. தியானம்: கிறிஸ்துவின் திருச்சபையிடம் எந்தவொரு நேரத்திலும் கிறிஸ்துவானவர் திரும்பி வருவதற்கான எதிர்பார்ப்பு நம்மிடம் இருக்க வேண்டும். விசுவாசிக்க வேண்டிய சத்தியம்: திரும்பி […]

பெப்ரவரி 9 வெள்ளி

சத்தியவசனம் – இலங்கை இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : சங். 123:1-4 2சாமு. 24:12-14 கர்த்தரின் கரங்களையே நோக்கியிரு பலத்த கையினாலும் ஓங்கிய புயத்தினாலும் அதைச் செய்தவரைத் துதியுங்கள். அவர் கிருபை என்றுமுள்ளது. சங்கீதம் 136:12 “பணம் தருவதாகக் கூறின சகோதரனை நம்பியிருந்தேன், கடைசியில் “பணம் இப்போது கிடைக்கவில்லை” என்று கூறி அவர் கையை விரித்துவிட்டார். நம்பிக்கையோடு இருந்தேன், ஏமாந்துவிட்டேன்” என்று என் நண்பர் ஒருவர் கவலையுடன் கூறினார். ஆம், மனிதக் கரங்கள் மறுத்துவிடும், […]

பெப்ரவரி 8 வியாழன்

சத்தியவசனம் – இலங்கை இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : ஆதி 39:21-23 கர்த்தர் கூடவே இருக்கும்போது உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும். சங்கீதம் 51:11 “என்னோடிரும், என் கூடவே இரும், ஓ! இயேசுவே, நீர் இல்லாமல் நான் வாழ முடியாது” இன்று அனைவரும் விரும்பிப் பாடுகிற பாடல்களில் ஒன்று இது. சீஷரில்அநேகர் இயேசுவிடமிருந்து பின்வாங்கிப்போக, “நீங்களும் போக மனதாயிருக்கிறீர் களா” என்று பன்னிருவரிடம் இயேசு […]

பெப்ரவரி 7 புதன்

சத்தியவசனம் – இலங்கை ???? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : 2இராஜா 20:1-6 நம்மை மறவாத தேவன் …உன் கண்ணீரைக் கண்டேன். இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன். மூன்றாம் நாளிலே நீ கர்த்தருடைய ஆலயத்துக்குப் போவாய். 2இரா.20:5 எமது சபையில் ஆராதித்துக்கொண்டு, கர்த்தருடைய காரியங்களிலும் கரிசனையாயிருந்த ஒரு மூத்த சகோதரர் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு, கால்கள் வீங்கின நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். வைத்தியர்கள் கைவிட்ட நிலை. அவரைப் பார்ப்பதற்கு நானும் இன்னுமொருவரும் போனபோது “உங்கள் இருவரை […]

பெப்ரவரி 6 செவ்வாய்

சத்தியவசனம் – இலங்கை இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : ஆதி 37:31-35 ஆராய்ந்து அறிந்துகொள்! வழிகளிலே நின்று, பூர்வ பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்ல வழி எங்கே என்று பார்த்து, அதிலே நடவுங்கள்… எரேமியா 6:16 ஆலய காரியாலயத்தில் வேலை செய்த ஒரு மூத்த சகோதரி திடீரென சுகயீனமுற்றாள். வைத்தியரிடம் காட்டி இரத்தப் பரிசோதனை எடுத்தபோது, லியூக்கேமியா அதாவது இரத்தப்புற்றுநோய் உள்ளது என்று கண்டுப்பிடிக்கப்பட்டது. ஏனைய ஆலய ஊழியர்கள் சகோதர சகோதரிகளும், இப்படி […]

பெப்ரவரி  5 திங்கள்

சத்தியவசனம் – இலங்கை இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : எஸ்தர் 3:13-15 4:15-17 உபவாசமும் ஜெபமும் …யூதருக்குள்ளே மகா துக்கமும், உபவாசமும், அழுகையும், புலம்பலும் உண்டாகி, அநேகர் இரட்டுடுத்திச் சாம்பலில் கிடந்தார்கள். எஸ்தர் 4:3 உபவாசிக்கும்போது உள்ளான மனுஷன் பெலனடைந்து வெளியான சரீரம் ஒடுக்கப்படுகிறது. உள்ளான மனுஷன் சோர்ந்துபோனால் முழுமையும் சோர்ந்துவிடும். மாறாக, உள்ளான மனுஷன் வல்லமையாய் இருந்தால் பெலவீனமான சரீரம்கூடபெலனடைந்து விடும். ஒரு சபையில், வியாதியஸ்தர்களுக்காகவும் தேவையுள்ளோர் யாவருக்காகவும் தொடர்ந்து உபவாசித்து ஜெபித்தபோது, […]

பெப்ரவரி  4 ஞாயிறு

சத்தியவசனம் – இலங்கை இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : எபிரெயர் 3:12-19 அவிசுவாசம் ஒரு தடைக்கல் அவர்களுடைய அவிசுவாசத்தினிமித்தம் அவர் அங்கே அநேக அற்புதங்களைச் செய்யவில்லை. மத்தேயு 13:58 “நான் நம்பவில்லை”, “அப்படி நடக்குமோ தெரியாது”, “எங்கே நடக்கப்போகின்றது”, இப்படிப்பட்ட வார்த்தைகளை நாம் பேசியிருக்கிறோம், அல்லவா! இந்த வார்த்தைகள்நமது அவிசுவாசத்தை வெளிப்படுத்துகின்ற வார்த்தைகள் என்றால் மிகையாகாது. அவிசுவாச வார்த்தை கொல்லும், மாறாக விசுவாச வார்த்தையோ வெல்லும். அவிசுவாசம் அசுத்தமான பாவங்கள் செய்ய வழி அமைக்கும். […]

பெப்ரவரி  3 சனி

சத்தியவசனம் – இலங்கை இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : ரோமர் 8:26-27 உங்களைக் கட்டியெழுப்புங்கள் …மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு பரிசுத்தஆவிக்குள் ஜெபம்பண்ணி…  யூதா 20 தேவனுடைய செய்தி: நமது சொந்த பெலத்தில் செயற்பட முயற்சிப்பது பயனற்றது. தியானம் : உங்களை பலப்படுத்தக்கூடிய தேவனுடைய கிருபையைப் பற்றிய தேவனுடைய செய்தியைச் சார்ந்திருங்கள். இந்தச் செய்தியானது தேவன் தனது பரிசுத்த மக்கள் எல்லோருக்கும் கொடுக்கும் ஆசீர்வாதத்தை தரும். (அப் 20:32) விசுவாசிக்க வேண்டிய சத்தியம்: […]

பெப்ரவரி  2 வெள்ளி

சத்தியவசனம் – இலங்கை இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : சங்கீதம் 119:89-96 வேதம் பேதமின்றிப் பேசும் நான் உம்முடையவன், என்னை இரட்சியும். உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறேன். சங்கீதம் 119:94 சுமார் முப்பது ஆண்டுகளின் பின்னர், என் உறவினர் ஒருவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போது அவர் கூறினார்: “முப்பது வருடங்களுக்கு முன்னர் நீங்கள் எனக்கு வேதத்தைத் தந்து, ஆண்டவர் இயேசுவைப் பற்றிச்சொல்லி, என்னை ஆலயத்திற்கும் கூட்டிச் சென்றீர்கள். இவைகளை நான் பெரிதுபடுத்தவில்லை. பின்பு திருமணமாகி […]

பெப்ரவரி 1 வியாழன்

சத்தியவசனம் – இலங்கை இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : மத்தேயு 26:36-39 தேவசித்தத்திற்கே ஒப்புக்கொடு உம்முடைய ராஜ்யம் வருவதாக. உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக. மத்தேயு 6:10 தேவனுடைய சித்தம் மனுஷருடைய திட்டம் போன்றது அல்ல. இவை இரண்டும் இயல்பாகவே ஒன்றுக்கொன்று முரணானவையாகும்; எதிரும் புதிருமாகவே காணப் படும். வாலிப நாட்களிலே படித்துவிட்டு, குறிப்பிட்ட வேலைக்கு விண்ணப்பித்துவிட்டு அது நிச்சயம் கிடைக்கும் என்று எண்ணிக் காத்திருந்தேன். பின்னர் அது கிடையாமல் போய்விட்டது; […]

Solverwp- WordPress Theme and Plugin