? சத்தியவசனம் – இலங்கை. ??
? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 2:36-39
அன்னாள்
…கர்த்தரைப் புகழ்ந்து, எருசலேமிலே மீட்புண்டாகக் காத்திருந்த யாவருக்கும் அவரைக்குறித்துப் பேசினாள். லூக்கா 2:38
தேவனுடைய செய்தி:
தனித்திருந்தாலும் தன்னம்பிக்கையுடன் தரித்திருந்த தீர்க்கதரிசி அன்னாளைப்போல தேவ உறவில் வாழவேண்டும்.
தியானம்:
சிமியோனைப்போல, கர்த்தரைப் புகழ்ந்து வாழ்த்துகிறாள் அன்னாள். வயதான, கணவனை இழந்த அவள் தீர்க்கதரிசியாக இருந்தாள்.
விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:
தேவனுக்கான பணியிலே வயது என்பது ஒரு எல்லையுமல்ல. ஆணோ, பெண்ணோ என்ற வேற்றுமையும் இல்லை.
பிரயோகப்படுத்தல் :
- அன்னாளின் வயதென்ன? அன்னாள் எப்படி ஆராதித்துக் கொண்டிருந்தாள்? உபவாசித்து, ஜெபம்பண்ணிய அவளைக் குறித்து, வசனம் 36ன்படி என்ன நினைக்கின்றீர்கள்?
- வசனம் 38ல், ‘மீட்புக்காக காத்திருந்த யாவருக்கும்” என்பதிலிருந்து அறிந்துகொள்வது யாது?
- இன்று இளம் வயதில் கணவனை இழந்த பெண்ணைக்குறித்து சமூகம் எப்படிப் பார்க்கிறது? என்ன சவால்களை அப்பெண் முகங்கொடுக்க வேண்டியிருக்கும்?
- வயதான காலத்தில், ‘பெரிதாக சாதிக்க முடியாது” என மக்கள் எண்ணினாலும், தேவனுடன் கிட்டி வாழ்கிறவர்கள் எப்படிப்பட்ட செல்வாக்கை சபையில், குடும்பத்தில், சமூகத்தில் செலுத்தலாம்? அன்னாளைப்போல தைரியமாக, கர்த்தருக்கு காத்திருக்கும் சக விசுவாசிகளை உற்சாகப்படுத்துவீர்களா?
- இளம் வயதினர்… தேவனுக்காக வாழும் வயதானவர்களுடன் சேர்ந்து, பணியாற்ற உங்களை அர்ப்பணிப்பீர்களா?
? இன்றைய எனது சிந்தனை:
? எமது விலாசம்
Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: Backtothebible.lk | www.Sathiyavasanam.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532
? அனுதினமும் தேவனுடன்.