? சத்தியவசனம் – இலங்கை. ??
? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 6:20-26
போதனை
…நீங்கள் சந்தோஷப்பட்டுக் களிகூருங்கள். பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்… லூக்கா 6:23
தேவனுடைய செய்தி:
தேவ நாமத்தின் நிமித்தம் உலகம் நம்மைப் பகைக்கும்.
தியானம்:
ஏழைகளே, நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். ஏனெனில் தேவனுடைய இராஜ்யம் உங்களுக்குரியது. இப்போது பசியால் வாடுகிற நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். ஏனெனில் நீங்கள் திருப்தியடைவீர்கள். இப்பொழுது அழுகிற நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். ஏனெனில் நீங்கள் சந்தோஷமாக நகைப்பீர்கள்.
விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:
தேவனுடைய ராஜ்யம் உங்களுடையது. அது எங்களுடையது.
பிரயோகப்படுத்தல் :
இயேசுவின் நிமித்தம் மக்கள் உங்களை வெறுக்கும்போதும் நிராகரிக்கும் போதும் நாம் என்ன செய்ய வேண்டும்?
நாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக மாற என்ன செய்ய வேண்டும்? எமது பலன் எங்கே மிகுதியாக இருக்கவேண்டும்?
நாம் ஐசுவரியவான்களாக இருந்தால், நாம் மற்றவர்களுக்கு என்ன செய்ய லாம்? மற்றவர்களைக் குறித்து எமது மனப்பான்மை எப்படிப்பட்டது?
வசனம் 26ன்படி, கள்ளத்தீர்க்கதரிசிகள் என்ன செய்கிறார்கள்? எல்லா மனுஷரும் புகழ்ச்சியாய்ப் பேசும்போது எமது மனப்பான்மை என்ன? அதை சீர்செய்துகொள்வது எப்படி?
நான் தேவ ராஜ்யத்திற்குரிய பிள்ளையா? அந்த விசுவாசம் எனக்குண்டா?
? இன்றைய எனது சிந்தனை:
? அனுதினமும் தேவனுடன்.