? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 8:16-21

தேவ வசனத்தின்படி நட!

தேவனுடைய வசனத்தைக் கேட்டு, அதின்படி செய்கிறவர்களே எனக்குத் தாயும் எனக்குச் சகோதரருமாயிருக்கிறார்கள்… லூக்கா 8:21

தேவனுடைய செய்தி:

விளக்கை ஏற்றி, உள்ளே வருவோருக்கு ஒளி கிடைக்கும்படி அதை விளக்குத்தண்டின் மீது வைப்பதுண்டு. அப்போது உள்ளே பிரவேசிக்கிறவர்கள் அதின் வெளிச்சத்தைக் காண்பார்கள்.

தியானம்:

இயேசுவின் தாயும் சகோதரர்களும் இயேசுவிடம் வந்தபோதிலும் மக்கள் திரளாக இருந்த காரணத்தால் அவரை அணுகமுடியவில்லை.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

வெளியரங்கமாகாத இரகசியமுமில்லை, அறியப்பட்டு வெளிக்குவராத மறைபொருளுமில்லை.

பிரயோகப்படுத்தல் :

வசனம் 21ன்படி, தேவனுடைய வசனத்தைக் கேட்டு, அதின்படி செயல்படுகிற வர்கள் இயேசுவுக்கு யாராக இருக்கிறார்கள்? நான் எப்படி?

தேவ வசனத்தை கேட்க விருப்பமற்ற மனநிலையில் இருப்பவர்களிடமிருந்து எவை எடுத்துக்கொள்ளப்படும்?

நீங்கள் தேவ வசனத்தைக் கேட்கும்போது, எத்தகைய மனநிலையில் கேட்கிறீர்கள் என்பது பற்றிக் கவனமாயிருக்கின்றீர்களா?

“உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும்” இதன் அர்த்தம் என்ன?

எனது வாழ்வில், பிறருக்கு நன்மை தரும் வெளிச்சம் காணப்படுகின்றதா?

? இன்றைய எனது சிந்தனை:

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin