? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி : மத்தேயு 6:19-21

அழியாத பொக்கிஷம்

பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள். மத்தேயு 6:20

இவ்வுலகில் நாம் எமக்குப் பெறுமதியாக வைத்திருக்கும் எத்தனையோ காரியங்க ளைச் சந்தர்ப்ப சூழ்நிலையால் இழந்துபோன அனுபவம் நமக்கிருக்கலாம். அல்லது, அவை நம்மைவிட்டுத் தொலைந்தும் இருக்கலாம். அழகான ஓவியம் ஒன்றை வீட்டில் தொங்கவிட்டு, அதைப் பார்த்துச் சந்தோஷப்பட்டிருந்தபோது, அந்த ஓவியத்தில் ஒருகருமை படருவதைக் காணநேர்ந்தது. கிட்டப்போய் பார்த்தபோது, அந்த முழு ஓவியத்தையுமே கறையான் ஆக்கிரமித்து அரித்துக்கொண்டிருந்தது தெரிந்தது.

கர்த்தரின் வார்த்தை எவ்வளவு உண்மையானது! இவ்வுலகில் நாம் சேர்த்து வைக்கும் பொக்கிஷங்களெல்லாமே ஒருநாள் அழிந்துபோகும். ஆனால் நாம் பரலோகத்தில் சேர்த்துவைக்கும் பொக்கிஷமோ அழியாது. அந்த அழியாத பொக்கிஷம்தான் என்ன? நாம் தேவனுக்காய்ச் செய்யும் பணிகள், மற்றவர்களுக்குச் செய்யும் நற்காரியங்கள், எமது விசுவாசம், நாம் ஆதாயப்படுத்திக்கொள்ளும் ஆத்துமாக்கள், தேவையுள்ளோருக்குக் கொடுக்கும் உதவிகள், பிறருக்காக ஏறெடுக்கும் ஜெபங்கள் இப்படியாகப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. நாம் பரலோகத்தில் பொக்கிஷமாய்ச் சேர்த்து வைப்பவை ஒருநாளும் அழியாது.

பணம், சொத்து, காணி நிலம் என்று இவ்வுலகத்தின் காரியங்களையே நாம்  சேர்த்து வைக்க அதிகமாகவே பிரயாசப்படுகிறோம். ஆனால் இவையெல்லாம் நாம் இந்த உலகத்தில் வாழும்வரைக்கும்தான். நாம் ஒன்றும் கொண்டு வந்ததுமில்லை@ போகும் போது ஒன்றும் கொண்டுபோவதும் இல்லை. பரலோகத்தில் நாம் சேர்த்துவைக்கும் பொக்கிஷமோ அழியாதது என்று ஆண்டவரே உறுதியளித்திருக்கிறார். இந்த லெந்து காலங்களில் நாம் உபவாசிப்போம், மாம்ச உணவுகளைத் தவிர்ப்போம், வீண் களியாட்டங்களை விட்டுவிடுவோம்; இவைகள் நல்லதுதான். ஆனால் கஷ்டப்படு வோரை நினைந்து நாம் செய்யும் நற்கிரியைகள் எமக்குப் பரலோகில் பொக்கிஷங் களைச் சேர்த்திடக்கூடும். அநித்தியமான இந்த உலக பொக்கிஷங்களைக் கொண்டே, பரலோகில் நமக்கான பொக்கிஷங்களை நாம் சேர்க்கப் பிரயாசப்படலாமே!

நாம் தகுதியற்றவர்களாய் இருந்தபோது எமக்காகத் தமது சொந்தக் குமாரனையே பொக்கிஷமாய் தந்தவர் தேவன். அவருடைய பிள்ளைகள் எமக்கும் அந்தப் பொறுப்பு உண்டு. நன்மை செய்யவும், நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும், தாராளமாய்க் கொடுக்கிறவர்களும், உதாரகுணமுள்ளவர்களுமாயிருக்கவும்… (1தீமோ. 6:18) நாம் பிரயாசப்பட வேண்டும்.

? இன்றைய சிந்தனைக்கு:

எனது உலக சேமிப்பின் மதிப்பு என்ன? பரலோக சேமிப்பின் மதிப்பு என்ன என்பதை எனது மனம் எங்கே இருக்கிறது என்பது காட்டித்தரும்.

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin