? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : 1 சாமுவேல் 2:30-36

நேர்மை

..என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம்பண்ணுவேன். என்னை அசட்டைபண்ணுகிறவர்கள் கனஈனப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 1சாமுவேல் 2:30

வாழ்வின் வெற்றி தோல்வியிலே பெரும் பங்கு வகிக்கும் நமது சிந்தனையோட்டத்தின் இன்னொரு பக்கம் “நேர்மை”. நல்லது-கெட்டது எது, சரி-பிழை எது என்று பகுத்தறிவ தற்கு நேர்மை அவசியம். நமது மனது நேர்மையாய் சிந்திக்குமானால், செயலிலும் நேர்மை விளங்கும். நாம் நேர்மை தவறும்போது, நாம் ஆராதிக்கும் தேவனைத்தான் அசட்டைசெய்கிறோம். தேவனை நாம் கனப்படுத்தினால் அவரும் நம்மைக் கனப்படுத்துவார்; நாம் அவரை அசட்டைபண்ணினால் அவரல்ல, நாமேதான் கனவீனப்படுவோம்.

ஒரு சிறிய உணவுச்சாலையை அந்தப் பிரதேசத்து சுகாதார ஆய்வாளர் சோதனை போட வந்தார். அவர் சொன்ன மாற்றங்களைச்செய்ய பல ஆயிரங்கள் செலவாகும். உரிமையாளர் விழித்தார். அதைக் கண்ட ஆய்வாளர், ஒரு ஐநூறு ரூபாய் இவற்றைச் சரிசெய்துவிடும். மறுத்தால், இரண்டு வாரத்தில் இத்தனை மாற்றங்களையும் செய்ய வேண்டும், தவறினால் கடையை இழுத்து மூடிவிடவேண்டும் என்றார். இங்கே நேர்மைக்கு விலை வெறும் ஐநூறு ரூபாய். துணிக் கடையொன்றில், பட்டுத் துணியை அளவெடுக்கும் போது துணியைச் சற்று இழுத்து அளவெடுக்கும்படி உரிமையாளர் ஊழியரிடம் கூறினார். அதற்கு அவர், “உங்கள் பட்டுத்துணியை இழுத்தால் நீளும். ஆனால், என்னுடைய மனச்சாட்சி நீளாது” என்றாராம். பின்நாட்களில் வேதாகமத்திற்கு விளக்க வுரை எழுதும் அளவுக்கு தேவன் இவரை உயர்த்தினார். இவர்தான் ஆடம் கிளார்க். மேலும், கிறிஸ்தவ பணியிலே, செலவீனத்தை அதிகரித்துக் காட்டும்படி ஒரு ஊழியர் வற்புறுத்தப்பட்டார். ஆனால், அவரோ உறுதியாக மறுத்துவிட்டார். நேர்மை சாகவில்லை. கர்த்தருக்கே மகிமை!

வேலை நேரத்தைக் களவாடுவது, பணவிஷயத்தில் தடுமாறுவது, கைக்கூலி கொடுப்பது வாங்குவது, பொய்த் தகவல்களைச் சாதகமாகப் பயன்படுத்துவது என்று பல நேர்மை யற்ற செயல்கள் நம் மத்தியிலும் உண்டு. அன்று ஏலியின் பிள்ளைகள் முறைகேடாக மட்டுமல்ல, கர்த்தருடைய பலியின் விடயத்திலும் நேர்மையற்ற வழியிலும் நடந்தார்கள். அதன் முடிவு மிகவும் பரிதாபமாக இருந்தது. தவறுகளைக் கண்டும் காணாதவர்கள் போல, அவற்றுக்கு ஒத்துப்போகிறவர்களாக, உண்மையை மறைத்து பிரச்சனைக்கு தப்பித்துக்கொள்கிறவர்களாக நடக்க கிறிஸ்துவின் பிள்ளைகளாகிய நமக்கு சோதனைகள் வரும். நேர்மையாக வாழ்ந்து என்ன பயன் என்று அலுத்துக் கொள்கிறவர்களும் உண்டு. சகலவற்றிற்கும் தேவனிடத்தில் பதிலும் உண்டு, பலனும் உண்டு. எந்தச் சந்தர்ப்பத்திலும் நேர்மையைத் தவறவிடாதிருக்க தேவஆவியானவர் நமக்கு உதவுவாராக. தகுந்த நேரத்தில் தேவன் நம்மை உயர்த்தும்போது உலகம் நமக்குத் தலைவணங்கும் என்பது உறுதி.

? இன்றைய சிந்தனைக்கு:  

இதுவரை என் நேர்மைக்குச் சோதனை வந்து, நான் இடறியிருக்கிறேனா? சிந்தித்து மனந்திரும்புவேனாக.

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin