? சத்தியவசனம் – இலங்கை. ??
? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 1:46-58
மரியாளின் பாடல்
? பசியுள்ளவர்களை நன்மைகளினால் நிரப்பி, ஐசுவரியமுள்ளவர்களை வெறுமையாய் அனுப்பிவிட்டார். லூக்கா 1:53
? தேவனுடைய செய்தி:
தேவனுடைய சித்தத்தையும் திட்டத்தையும் நாடி அதற்குக் கீழ்ப்படியும் போது, மகத்தான சந்தோஷமும் திருப்தியும் ஏற்படும்.
? தியானம்:
தேவனது மூன்று குணாதிசயங்களை மரியாள் கூறுகின்றார். அவை எவை?
1. ப……………….. (வச 49) 2. இ……………….. (வச 50) 3. ப……………….. (வச 51)
? விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:
தேவன் இரக்கமாயிருக்கும் மக்கள் யார்?
1. பய……………….. (வச 49). 2. இ……………….. (வச 50) 3. ப……………….. (வச 51).
? பிரயோகப்படுத்தல் :
- எலிசபெத் வயதான காலகட்டத்தில் கர்ப்பந்தரித்தும், மரியாள் கன்னியாயிருக்கும்போதே கர்ப்பந்தரித்திருந்தும் ~களிகூருவதின்| இரகசியம் என்ன?
- வசனம் 47ல், ‘என் இரட்சகராகிய தேவனில்” என மரியாள் கூறுவதில் நீங்கள் விளங்கிக் கொள்வது என்ன?
- வசனம் 53 ல், பணக்காரரை தேவன் தள்ளிவிடுவாரா? பசியுள்ளவர்கள், ஐசுவரியவான்கள் என யாரைக் குறிப்பிடுகின்றார்?
- தனது வசதி, நலன், சௌகரியத்தைவிட எலிசபெத்தின் நலனில் அக்கறையை சரீர ரீதியில் மட்டுமல்ல, வார்த்தையிலும் ஆவிக்குரிய ரீதியிலும் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்தியதுபோல, நீங்கள் வரும் நாட்களில், யாரை தேவ வார்த்தையின்படி உற்சாகப்படுத்தப் போகிறீர்கள்?
? எனது சிந்தனை:
?️ எமது விலாசம்
Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: Backtothebible.lk | www.Sathiyavasanam.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532
? அனுதினமும் தேவனுடன்.