ஆகஸ்ட் 5 வெள்ளி
? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : யாத். 18:13-27 கீழ்ப்படிவும் விட்டுக்கொடுப்பும் மோசே தன் மாமன் சொல்கேட்டு, அவன் சொன்னபடியெல்லாம் செய்தான். யாத்திராகமம் 18:24 அர்த்தமுள்ள கிறிஸ்தவ வாழ்வில் கீழ்ப்படிவுடன்கூடிய விட்டுக்கொடுக்கும் குணாதிசயம் மிக அவசியம். இதற்கு அடங்கி இருத்தலும், தாழ்மையான சிந்தையும் தேவை. இது மனிதராகிய நம்மால் இயலுமான காரியமா? ஆனால், இத்தகைய குணாதிசயங்களுடன் ஒரு மனிதனால் வாழமுடியும் என்பதற்கு முன்மாதிரியாக உலகில் மனிதனாக வந்துதித்த […]
ஆகஸ்ட் 4 வியாழன்
? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : மாற்கு 8:1-9 ஒன்றுமில்லாதபோது… அந்த நாட்களிலே திரளான ஜனங்கள் கூடிவந்திருக்கையில், அவர்கள் சாப்பிடுகிறதற்கு ஒன்றுமில்லாதபோது, இயேசு தம்முடைய சீஷரை அழைத்து… மாற்கு 8:1 நம்மிடம் தேவையானவை எல்லாமே இருக்கும்போது இன்னும் ஒன்று கிடைத்தால் அதன் பெறுமதி விளங்காது. மாறாக, குறைவுபட்ட நிலையில் யாராவது ஒருவர் ஏதாவது ஒன்று கொடுத்தாலே அது நமக்கு மிக்க பெறுமதி வாய்ந்ததாக இருப்பது மாத்திரமல்ல, கொடுத்தவரிடமும் […]
ஆகஸ்ட் 3 புதன்
? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : எண். 13:17-33 நன்மையானவைகளைப் பேசு …நாம் உடனே போய் அதைச் சுதந்தரித்துக்கொள்வோம். நாம் அதை எளிதாய் ஜெயித்துக் கொள்ளலாம்… எண்ணாகமம் 13:30 ஒரு புதிய இடத்திற்குப் போவதற்கு முன்பு, அவ்விடத்தைப்பற்றி நாம் விசாரிப்பதுண்டு. அப்போது அந்த இடத்தைப்பற்றி அதிக எண்ணிக்கையானோர் என்ன கூறுகிறார்களோ, அதனையே நாம் ஏற்றுக்கொண்டுவிடுவது இயல்பு. இங்கே கானானைச் சுற்றிப்பார்க்க பன்னிரண்டு பேர் சென்றார்கள். அவர்களில் பத்துப்பேர், […]
ஆகஸ்ட் 2 செவ்வாய்
? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : யாத் 4:10-18, எண். 20:2-12 கீழ்ப்படிவு என்றும் அவசியம் கர்த்தர் தனக்குக் கற்பித்தபடியெல்லாம் மோசே செய்தான். யாத்திராகமம் 40:16 மனித வாழ்வில் வெற்றிப் பாதையின் முதற்படி கீழ்ப்படிதல். இது முழுமையாகக் காணப்படவேண்டுமாயின், விசுவாசம், தாழ்மை, விட்டுக்கொடுத்தல் இம்மூன்றும் அவசியம். விசுவாசம் இருந்தால்தான், கர்த்தர் தாம் சொன்ன வார்த்தையின்படியே நடத்துவார் என்பதை நம்பமுடியும். தாழ்மையுள்ள சிந்தையைத் தரித்தவர்களாக வாழ்ந்தால் மாத்திரமே அவரது […]
ஆகஸ்ட் 1 திங்கள்
? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : யோபு 42:12-17 பாடுகளின் பின் ஆசீர்வாதம் ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன். ரோமர் 8:18 புயலுக்குப் பின்னே அமைதி, இரவின் பின் வெளிச்சம் என்றெல்லாம் சொல்லுவார்கள். அதேமாதிரி பாடுகளின் பின்னரும் ஏதோவொன்று இருக்கத்தானே வேண்டும். வாழ்க்கையில் பாடுகள் இல்லாத மனிதர் யாருமில்லை. வேதாகமத்திலுள்ள பாத்திரங்களும் இப்படியே பல பாடுகளுக்கு முகங்கொடுத்ததன் பின்னரே […]
ஜூலை 31 ஞாயிறு
? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : 1யோவா 3:11-18 இயேசுவின் பாதையில்… அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்… 1யோவான் 3:16 விழுந்துப்போன இந்த உலகில் மாம்சத்தில் வாழுகின்ற நமக்கு நிச்சயம் தொல்லை பல உண்டு. நாம் ஆண்டவரின் பிள்ளைகள் என்பதால் தப்பிக்கொள்ளலாம் என்று எண்ண முடியாது. நமக்குத்தான் இந்த உலகம் அதிக துன்பம் தரும். ஆனால், எதற்கெடுத்தாலும், “ஏன்தான் இந்த சோதனை” […]
ஜூலை 30 சனி
? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 20:9-21 மூலைக்கல் அந்தக் கல்லின்மேல் விழுகிறவன் எவனோ அவன் நொறுங்கிப்போவான், அது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்… லூக்கா 20:18 தேவனுடைய செய்தி: திராட்சைத் தோட்டத்தின் சொந்தக்காரர் கர்த்தர். தியானம்: குத்தகைக்கு விடப்பட்ட திராட்சை தோட்டத்தின் பலனைப் பெற ஒருவரை அனுப்பியபோது, தொழிலாளர்கள் அவரை நையப்புடைத்து வெறுங்கையராய் அனுப்பினார்கள். வேறொருவனை அனுப்பியபோதும் அப்படியே செய்தார்கள். மூன்றாமவனை அனுப்பியபோதும், அவனைக் […]
ஜூலை 29 வெள்ளி
? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : யோவான் 5:19-24 நான் என்ன செய்ய? நான் என் சுயமாய் ஒன்றுஞ் செய்கிறதில்லை. …என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால்… யோவான் 5:30 “அப்பா எல்லாவற்றையும் சொல்லிவிட்டீர்கள். இனி நான் என்ன செய்யவேண்டும்” என்று கேட்டான் மகன். “கேட்டதைச் செய்” என்றார் அப்பா. நாம் அதிகம் கற்றுக் கொள்கிறோம், ஆனால், கற்றவை நமது நடைமுறை வாழ்வில் வெளிப்படுகிறதா? வேதாகமத்தை […]
ஜூலை 28 வியாழன்
? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 22:13-20 நமது சரீரம் உடைக்கப்படுமா! பின்பு அவர் அப்பத்தை எடுத்து ஸ்தோத்திரம்பண்ணி, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து… லூக்கா 22:19 முந்தின காலங்களில் சபை கூடிவந்தபோது நமது நாட்டு பாண்தான் திருவிருந்தில் பிட்டுக் கொடுக்கப்பட்டது. ஆசீர்வதிக்கப்பட்ட பாணில் ஒரு சிறு துண்டை போதகர் பிட்டு நமது கைகளில் வைத்தபோது, மெய்யாகவே ஒருவித பயம் உண்டானது. பின்னர் பாணை சிறுதுண்டுகளாக […]
ஜூலை 27 புதன்
? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : மாற்கு 8:1-9 உடைக்கப்பட்ட அப்பங்கள் …அந்த ஏழு அப்பங்களையும் எடுத்து, ஸ்தோத்திரம் பண்ணி, பிட்டு, அவர்களுக்குப் பரிமாறும்படி சீஷர்களிடத்தில் கொடுத்தார்… மாற்கு 8:6 பசியோடு தங்களைத் தேடி வருகிறவர்களுக்கு உள்ளதைப் பங்கிட்டுக் கொடுப்பது மன்றி, தங்களுக்கு மாத்திரமே போதுமானது இருக்கும்போதும், அதையும் பிறருக்குக் கொடுத்து விட்டு, பிள்ளைகள் உட்பட யாவரும் உபவாச ஜெபத்திற்குக் கடந்துபோய் விடுகிற ஒரு குடும்பத்தை நான் […]