ஜுன், 30 வியாழன்
? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : ஆதியாகமம் 8:1-22 பூமியைச் சபிப்பதில்லை சுகந்த வாசனையைக் கர்த்தர் முகர்ந்தார். அப்பொழுது கர்த்தர்: இனி நான் மனுஷன் நிமித்தம் பூமியைச் சபிப்பதில்லை, …சங்கரிப்பதில்லை. ஆதியாகமம் 8:21 ஓய்வுநாள் பாடசாலையிலே, நோவா பேழை செய்தான், இரவும் பகலும் நாற்பது நாட்கள் மழை பெய்தது, வெள்ளம் வந்தது, பேழை மிதந்தது, பின் பேழை அரராத் மலையில் நின்றது என்று கற்பிப்பார்கள். ஆனால், அப்படியல்ல, […]
ஜுன், 29 புதன்
? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : 1 சாமுவேல் 3:1-18 கேட்க ஆயத்தமா? …கர்த்தர் வந்து நின்று முன்போல, சாமுவேலே சாமுவேலே என்று கூப்பிட்டார், அதற்குச் சாமுவேல், சொல்லும், அடியேன் கேட்கிறேன் என்றான். 1 சாமுவேல் 3:10 ஒரு தினத்தியான புத்தகத்திலே எழுதப்பட்டிருந்த வாசகம் என் மனதைத் தொட்டது. அது என்னவெனில் “நேரம் கொடுத்துக் கேட்பவனிடத்திலேயே, தேவன் பேச விரும்புகிறார்.” அதை அப்படியே எனது வேதாகமத்தின் வெளிமட்டையிலே […]
ஜுன், 28 செவ்வாய்
? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : ஆதியாகமம் 7:1-24 நோவாவின் பணி நோவா தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியெல்லாம் செய்தான். ஜலப்பிரளயம் பூமியின்மேல் உண்டானபோது, நோவா அறுநூறு வயதாயிருந்தான். ஆதியாகமம் 7:5-6 “நானும் என் தேவனும் மாத்திரம்” என்று வாழ்ந்துவிட்டு, அப்படியே பரலோகம் போய் விடவே அநேகர் ஆசைப்படுவதுண்டு. இதைவிடுத்து, சுவிசேஷம் சொல்லுவதோ, ஆண்டவருக்குப் பணி செய்வதோ எதுவும் கிடையாது. இப்படிப் புறப்பட்டால் அநேக பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டிவரும். […]
ஜுன், 27 திங்கள்
? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : ஆதியாகமம் 6:10-22 நோவாவின் விசுவாசம் நோவா அப்படியே செய்தான், தேவன் தனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் அவன் செய்து முடித்தான். ஆதியாகமம் 6:22 இன்றைய நவீன சூழலிலே, கிறிஸ்தவ விசுவாசம் செத்துவிட்டதா என்று கேட்டால் அதை யாரும் தவறாக எடுக்கமுடியாது. எதைச் சொன்னாலும் அதற்குக் குதர்க்கமாய் கேள்வி கேட்போர்தான் இன்று அதிகம். எதையும் விசுவாசத்தில் புரிந்து உணர்ந்து கொள்ள மக்கள் பின்நிற்கின்றனர். எல்லாவற்றையும் […]
ஜுன், 26 ஞாயிறு
? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : ஆதியாகமம் 6:1-8 தேவனோடுள்ள உறவு நோவாவுக்கோ கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது. ஆதியாகமம் 6:8 “கடவுளுக்குப் பயந்து, உண்மைத்துவமாய் இருப்பதில் என்ன பயன்?பாவம்செய்து, அநீதியாய் வாழுகிற பலரும் சந்தோஷமாகத்தானே இருக்கிறார்கள். நாம் உத்தமாய் வாழ்ந்தும் எவ்வளவோ கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியல்லவா உள்ளது” என்று சலித்துக ;கொள ;வோர் அநேகர். மனுஷர் பூமியிலே பெருகினது மட்டுமல்ல, அவர்களோடே பாவமும் பெருகியது. மனுஷருடைய […]
ஜுன், 25 சனி
? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 18:31-43 உன் பார்வையை மீண்டும் பெறு இயேசு அவனை நோக்கி: நீ பார்வையடைவாயாக, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். லூக்கா 18:42 தேவனுடைய செய்தி: தாவீதின் குமாரனாகிய இயேசு நம்மீது இரக்கமுடையவர். தியானம்: நாசரேத்தைச் சேர்ந்த இயேசு இவ்வழியைக் கடந்து வந்துகொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டவுடனே, குருடன் பரவசமுற்று, “இயேசுவே தாவீதின் குமாரனே! தயவுசெய்து எனக்கு உதவுங்கள்” என்றான். […]
ஜுன், 24 வெள்ளி
? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : ஆதியாகமம் 4:5-16 பாவத்தில் விழுவாய்! நீ நன்மை செய்தால் மேன்மையில்லையோ? நீ நன்மை செய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும். அவன் ஆசை உன்னைப் பற்றியிருக்கும் நீ அவனை ஆண்டுகொள்வாய்… ஆதியாகமம் 4:7 வாழ்க்கையிலே நாம் பிரச்சனைகளை எதிர்நோக்கும்போது, அதைக்குறித்து ஆராய்ந்து பார்ப்பது நல்லது. இந்தப் பிரச்சனை வருவதற்கு நான் எந்தவிதத்திலும் காரணமாய் இருந்திருக்கிறேனா? இப்பிரச்சனை வரவிடாமல் தவிர்த்திருக்கலாமா? இவற்றை ஆராய்ந்து […]
ஜுன், 23 வியாழன்
? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : ஆதியாகமம் 4:1-4 மேன்மையானதைக் கொடு! ஆபேலும் தன் மந்தையின் தலையீற்றுக்களிலும், அவைகளில் கொழுமையானவைகளிலும் …அவன் காணிக்கையைக் கர்த்தர் அங்கீகரித்தார். ஆதி. 4:4 கிழிந்த நோட்டுக்களையும், செல்லாக் காசுகளையும் தயவாக காணிக்கைப் பெட்டியில் போடாதீர்கள் என்று ஒருதடவை போதகர் பொது அறிவித்தல் கொடுத்தார். காரணம், யாரோ அப்படிப்பட்டவற்றைப் பெட்டியில் போட்டிருக்கிறார்கள். காயீன், ஆபேல் இருவரும் சகோதரர்கள். ஒருவன் நிலத்தைப் பண்படுத்திப் பயிர் […]
ஜுன், 22 புதன்
? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : ஆதியாகமம் 3:14-24 அவன் உன்னை ஆண்டுகொள்வான்! …உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும். அவன் உன்னை ஆண்டுகொள்வான் என்றார். ஆதியாகமம் 3:16 ஒரு காலத்திலே ஆண்கள் நன்றாகப் படித்து, வேலைக்குப்போய் சம்பாதிக்கிறவர்களாகவும், பெண்கள் அதிகம் படிக்காமல் பொதுவாக வீட்டில் இருந்து குழந்தைகளை, குடும்பத்தைப் பராமரிக்கிறவளாகவும் இருந்ததுண்டு. ஆனால் இன்று பெண்களும் ஆண்களுக்குச் சரிக்குச் சமமாக எல்லாத் துறைகளிலும் பணியாற்றுவதைக் காண்கிறோம். […]
ஜுன், 21 செவ்வாய்
? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : ஆதி 2:15-25 தனிமை நல்லதல்ல பின்பு தேவனாகிய கர்த்தர், மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார். ஆதியாகமம் 2:18 நாய்க்குத் தடுப்பூசி போடுவதற்காக மிருக வைத்தியரிடம் போனபோது, அங்கே ஒரு நாய்க்குச் சத்திரசிகிச்சை செய்து அதன் கர்ப்பப் பையை அகற்றவதைக் கண்டேன். இன்னொரு நாய்க்கு இரத்தப் பரிசோதனை செய்கிறார்கள். இதையெல்லாம் பார்த்த போது, மனுஷரைப்போலவே செல்லப்பிராணிகளுக்கும் […]