ஜுன், 6 திங்கள்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : ரோமர் 8:26-30 முற்றுமுழுதுமாக அறிந்தவர் …நாம் ஏற்றபடி, வேண்டிக்கொள்ள …ஆவியானவர் தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார். ரோமர் 8:26 சாதாரணமாக ஒருவரோடு சம்பாஷிக்கிறபோது, நாம் சொல்லுவதை மற்றவர் புரிந்து கொள்ளக் கடினப்படுவதைக் கண்டால், நாம் மீண்டும் தெளிவாக அதே காரியத்தை அவர் புரிந்துகொள்ளும்படி சொல்லுவதுண்டு. வேறு ஒரு சந்தர்ப்பத்தில், சொல்வதை தவறாகப் புரிந்துகொண்ட ஒருவர் நம்மைப்பற்றி தப்பாக […]

ஜுன், 5 ஞாயிறு

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : யோபு 2:1-10 எதிர்மறையான சிந்தனை அப்பொழுது அவன் மனைவி …நீர் இன்னும் உம்முடைய உத்தமத்தில் உறுதியாய் நிற்கிறீரோ? தேவனைத் தூஷித்து ஜீவனை விடும் என்றாள். யோபு 2:9 யோபுவின் வாழ்க்கையைக்குறித்து வேதப்படிப்பு நடந்துகொண்டிருந்த சமயத்தில், யோபுவின் மனைவி யோபுவைத் திட்டியதைக்குறித்துப் பேசப்பட்டது. அப்போது, அங்கிருந்த ஒரு தாயார், “யோபுவின் மனைவி அவளது விரக்தியிலேயே இப்படியாகப் பேசினாள். அதை நாம் குற்றம் […]

ஜுன், 4 சனி

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 18:1-8 பலனளிக்கும் தேவன் சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும்… லூக்கா 18:1 தேவனுடைய செய்தி: நாம் சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும். தியானம்: தேவனைக் குறித்தும் சக மனிதரைக்குறித்தும் கவலைப்படாத ஒரு நியாயாதிபதியிடம் “எனக்குத் தீமை செய்கிற ஒரு மனிதன் உள்ளான். எனக்கு நீதி வழங்குங்கள்” என்றாள் விதவை பெண். பல நாள் அக்கறையற்று இருந்த அவன், அவளது தொந்தரவு நிமித்தம் […]

ஜுன் 3 வெள்ளி

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : தானி 3:14-30 நம்பிக்கையோடு செயற்படு] நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன், எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார், …விடுவிக்காமற்போனாலும்,… தானியேல் 3:17-18 நம்பிக்கையென்பது, வெறும் வாய் வார்த்தையில் மட்டும் வெளிப்படுவதல்ல, அது செயலிலும் வெளிப்படவேண்டும். இன்று தேவன் மீது அதிக நம்பிக்கையுள்ளவர்கள் போல பேசுபவர்களெல்லாம், ஒரு இக்கட்டான சூழ்நிலை வந்ததும் தடுமாறிப் போகிறார்களே! அப்படியென்றால் அவர்களது நம்பிக்கை எங்கே? நம்பிக்கையென்பது ஒரு புள்ளியல்ல, […]

ஜுன், 2 வியாழன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : ஆதி 15:1-6 சுயபுத்தி சாராய் ஆபிராமை நோக்கி, …என் அடிமைப்பெண்ணோடே சேரும், …சாராயின் வார்த்தைக்கு ஆபிராம் செவிகொடுத்தான். ஆதியாகமம் 16:2 ஒரு காரியத்தைத் தொடங்கும் முன்பு கர்த்தரிடத்தில் கேட்பதற்கும், நமது திட்டப் படியே ஆரம்பித்துச் செய்துவிட்டு, “கடவுளே, இதை ஆசீர்வதியும்” என்று ஜெபிப்ப தற்கும் நிறையவே வித்தியாசம் உண்டு. சிலர் கர்த்தருக்கே ஆலோசனை சொல்வது போல நடந்துகொள்வதும் உண்டு. தனக்குப் […]

ஜுன் 1, 2022 புதன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : ஆதி 16:1-16 கடினமான பாதை அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர், நீ உன் நாச்சியாரண்டைக்குத் திரும்பிப்போய், அவள் கையின் கீழ் அடங்கியிரு என்றார். ஆதியாகமம் 16:9 இலகுவான பாதையிலே நாம் கண்ணை மூடிக்கொண்டும் பயமில்லாமலும் நடந்து விடலாம். ஆனால் கடினமான பாதையில் செல்லும்போது, ஒவ்வொரு நிமிடமும் விழிப் போடும், கவனத்தோடும் செல்லவேண்டியதாக இருக்கும். காரணம், நாம் கவனமாக நடக்காவிட்டால் ஆபத்துக்களையும் எதிர்நோக்க […]

31 மே, 2022 செவ்வாய்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : சங்கீதம் 103:1-2 முழு ஆத்துமாவோடு… என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி. என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி. சங்கீதம் 103:1 வாழ்வின் சாதகமான பாதகமான சகலவிதமான நிலைகளிலும் தன் தேவனைத் துதிக்கும்படி தன் ஆத்துமாவுக்கே அழைப்புவிடுத்த தாவீதுக்கு யாருமே ஒப்பாக முடியாது. தாவீது தனது உணர்வுகளைத் தேவனுக்கு முன்பாக ஒருபோதும் அடக்கி வைக்கவேயில்லை. கோபம், குதூகலம், பாவஉணர்வு […]

30 மே, 2022 திங்கள்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : சங்கீதம் 51 உடைந்த கண்ணாடித் துண்டுகள் தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும். நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும். சங்கீதம் 51:10 அருமையானதொரு முகம்பார்க்கும் கண்ணாடி, விழுந்து, பல துண ;டுகளாக உடைந்து கிடந்தது. இதைப் பார்த்தவர்கள் சிலரது கருத்துக்கள் இதோ! “பாவத்தில் விழுகிற வன் வாழ்வும் இப்படித்தான் துண்டுதுண்டாகிறது” என்றார் ஒருவர். “இதனால் இனி உபயோகம் இல்லை” […]

29 மே, 2022 ஞாயிறு

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : யோசுவா 1:1-9 ஒரே வழி …இரவும் பகலும் அதைத் தியானித்துக் கொண்டிருப்பாயாக. அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய். யோசுவா 1:8 “அவசரம்” தியானத்திற்கு உதவாது. தேவனோடு உறவுகொள்ளும் தியானம் இல்லா விட்டால் வாழ்வில் வெற்றியும் கிடையாது. தேவனுக்குள்ளான வெற்றி இல்லாவிட்டால் தேவனுக்காக எதையும் சாதிக்கவும் முடியாது. அந்தச் சாதனை இல்லாவிட்டால் நாம் வாழ்ந்து என்ன பயன்? வாழ்வின் நோக்கம் […]

28 மே, 2022 சனி

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 17:20-37 தேவனுடைய ராஜ்யம் தன் ஜீவனை இரட்சிக்க வகைதேடுகிறவன் அதை இழந்துபோவான். இழந்துபோகிறவன் அதை உயிர்ப்பித்துக் கொள்ளுவான். லூக்கா 17:33 தேவனுடைய செய்தி: இயேசு தமது வல்லமையினால் அநேகரை குணமாக்கினார். தியானம்: இயேசுவானவர் மீண்டும் வரும்போது மின்னல் வானத்தின் ஒரு திசையில் தோன்றி மறுதிசை வரைக்கும் பிரகாசிக்கிறதுபோல மனுஷகுமாரனும் தம்முடைய நாளிலே தோன்றுவார். விசுவாசிக்க வேண்டிய சத்தியம்: தேவனுடைய […]

Solverwp- WordPress Theme and Plugin