3 மே, 2022 செவ்வாய்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : கொலோசெயர் 3:12-15 ஒருவருக்கொருவர்… ஒருவரையொருவர் தாங்கி…. கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். கொலோசெயர் 3:13 “ஒருவர் தவறை மற்றவர் மன்னித்து, தவறு செய்தவரை ஏற்றுக்கொண்டு அன்புசெலுத்தா விடில், நாம் எப்படி பரமண்டல ஜெபத்தைச் சொல்ல முடியும்” என்று கேட்டார் ஒருவர். இது எத்தனை உண்மை. வெறும் ஜடங்கள ;போலவே சில ஜெபங்களை நாம் செய்து விடுகிறோம். தினமும் ஜெபிக்கிறோம்; […]

2 மே, 2022 திங்கள்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : சங்கீதம் 103:8-13 அன்புக்கு ஒரு கணக்கு மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மைவிட்டு விலக்கினார். சங்கீதம் 103:12 தாவீது தேவ அன்பிற்கு ஒரு கணக்குப்போட்டுப் பார்த்தார். 14 பாகை சரிந்த நிலையில் செங்குத்தான அச்சில் சுழன்றுகொண்டிருக்கும் பூமியைப் பொறுத்தளவில், கிழக்கும் மேற்கும் ஒருபோதுமே சந்திக்கவே முடியாது. அப்படியிருக்க, அவற்றுக்கிடையில் தூரம் ஏது? தூரம் […]

1 மே, 2022 ஞாயிறு

­­ ? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : சங்கீதம் 92:1-5 நன்றியுள்ளம்! கர்த்தரைத் துதிப்பதும், உன்னதமானவரே, உமது நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுவதும்… நலமாயிருக்கும். சங்கீதம் 92:1,3 வருடத்தின் நான்கு மாதங்களைக் கடந்துவந்துவிட்ட இந்த இடத்தில் நின்று நம்மால் தேவனைத் துதிக்கமுடியுமா? அல்லது பாரமான இதயத்தோடு மௌனம் சாதிப்போமா? குறைகள் கூறுவதும், குறைவுகளைக் குறித்துப் பேசுவதும் நமக்கு மிக இலகுவான காரியம் என்றால் அது மிகையாகாது. ஆனால், உள்ளத்தின் ஆழத்திலிருந்து […]

30 ஏப்ரல், 2022 சனி

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 16:14-18 மாறாத தேவ வாக்கியங்கள் …தேவனோ உங்கள் இருதயங்களை அறிந்திருக்கிறார். மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது.லூக்கா 16:15 தேவனுடைய செய்தி:  “தேவனுடைய இராஜ்யத்தில் செல்வதற்குப் பலர் மிகவும் முயன்று வருகிறார்கள். உண்மையில், இயேசு இன்றி வேறு வழியேதுமில்லை” தியானம்: “மக்களின் முன்பாக நீங்கள் நல்லவர்களாக நடந்துகொள்கிறீர்கள். ஆனால் உங்கள் இதயத்தில் உண்மையாகவே என்ன இருக்கிறதென தேவன் […]

29 ஏப்ரல், 2022 வெள்ளி

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : ரோமர் 7:7-12 அந்தரங்கம் வெளியாகும்! …அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும், நன்மையானாலும் தீமையானாலும் தேவன் நியாயத்திலே கொண்டுவருவார். பிரசங்கி 12:14 தொலைந்துவிட்டது என்று விட்டுவிட்ட பொருளை, பல நாட்களின் பின்பு கண்டெடுத்த அனுபவம் உங்களுக்குண்டா? முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் நேர்ந்த ஒரு தவறு, இப்போது வெளிப்பட்டு எஞ்சிய வாழ்வையே சீரழித்துவிட்டது என்று ஒருவர் வேதனைப் பட்டார். இப்படியாக காரியங்கள் வெளிப்படுமானால், தேவனுக்கு […]

28 ஏப்ரல், 2022 வியாழன்

­­ ? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : நீதிமொழிகள் 4:20-27 இருதய காவல் எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக் கொள். அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும். நீதிமொழிகள் 4:23 “அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான்” (நீதி.23:7). தேவனைத் துதிக்கும் துதியும் ஸ்தோத்திரமும் இருதயத்தின் ஆழத்திலிருந்து புறப்பட வேண்டும். அதேசமயம், அதே இதயத்திலிருந்து எழும் சிந்தனைகள் நம்மையும் தேவனையும் பிரித்துப்போடும் அளவுக்குச் சக்தி வாய்ந்தவை […]

27 ஏப்ரல், 2022 புதன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : சங்கீதம் 103:1-9 ஆத்துமாவின் கீதம் என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி. அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே. சங்கீதம் 103:2 ஒரு புதிய ஆங்கில மொழிபெயர்ப்பில் இந்த சங்கீத வார்த்தைகள் Let all that I am, praise the Lord  என்று எழுதப்பட்டிருக்கிறது. அதாவது, நானாய் இருக்கிற அல்லது என்னுடைய சகலமுமே கர்த்தரைத் துதிப்பதாக என்று இது அர்த்தம் […]

26 ஏப்ரல், 2022 செவ்வாய்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : 1கொரி 11:27-33 என்னை நானே நிதானிப்பேனா! எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன். 1கொரிந்தியர் 11:28 கர்த்தருடைய பந்தி எப்படி அனுசரிக்கப்படவேண்டும் என்று பவுல் நான்கு காரியங் களைத் தெளிவுபடுத்துகிறார். ஒன்று, நமது பாவங்களுக்காகக் கிறிஸ்து மரித்தார் என்பதை நாம் பிரகடனப்படுத்துவதால் கவனமாகப் பங்கேற்கவேண்டும். அடுத்தது, தேவனுக்கேற்ற கனத்துடனும் பயபக்தியுடனும், நம்மைத் தகுதிப்படுத்தி […]

25 ஏப்ரல், 2022 திங்கள்

­­ ? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : 1கொரி 11:23-26 கர்த்தர் வருமளவும்… ..நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள். 1கொரி.11:26 “வீட்டிலே அப்பம் சாப்பிடும்போதெல்லாம் இறந்துபோன என் அம்மாதான் ஞாபகத் திற்கு வருவார்கள். ஏனென்றால் அவர் கடைசியாக எனக்குச் சமைத்துக்கொடுத்தது அப்பம்தான்” என்று ஒருவர் தன் தாயாரை நினைவுகூர்ந்து இந்த சம்பவத்தைப் பகிர்ந்துகொண்டார். இன்று, திருவிருந்து […]

24 ஏப்ரல், 2022 ஞாயிறு

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : எபிரெயர் 4:9-16 தைரியமாகவே சேருவோம்! ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யும் கிருபையை அடையவும், தைரியமாக கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம். எபி.4:16 நம்முடைய இக்கட்டுகளில் நமக்கு யார்வேண்டுமானாலும் ஆறுதல் கூறலாம். ஆனால் நாம் கடந்துபோகின்ற கடின பாதையில் ஏற்கனவே சென்ற ஒருவரால்தான் நமது உண்மையான வலியைப் புரிந்துகொள்ளமுடியும். அவரிடமே நமக்கு மெய்யான ஆறுதல் கிடைக்கும். வழிநடத்துதல் கிடைக்கும். கர்த்தராகிய […]

Solverwp- WordPress Theme and Plugin