6 பெப்ரவரி, 2022 ஞாயிறு
? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: லூக்கா 9:22-27 இழந்ததைத் தருகிறவர்! தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்து போவான். என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்து போகிறவன் அதை இரட்சித்துக்கொள்வான். லூக்.9:24 ஒரு சிந்தனைக்குரிய கதை இது. ஒரு வாலிபன் போதகரான தனது மாமனாரிடம் சென்று, “என் எதிர்காலம் என்ன? கடவுள் எனக்காகக் கொண்டிருக்கும் நோக்கம் என்ன?” என்று கேட்டானாம். போதகரோ, “அதனை என்னால் குறிப்பிட்டுக் கூறமுடியாது. […]
5 பெப்ரவரி, 2022 சனி
? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: லூக்கா 13:1-9 மனந்திரும்பாவிட்டால் அழிவு …நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள்… லூக்கா 13:5 தேவனுடைய செய்தி: தேவன் நிச்சயமாகவே நியாயம் தீர்ப்பார். மனந்திரும்பினால் மீட்பு. மனந்திரும்பாவிட்டால் அழிவு நிச்சயம். தியானம்: மனந்திரும்பாத பாராயினும் இறுதியில் ஒரே முடிவை அடைவார்கள். அது நரகத்தில் தள்ளப்படுவதான அழிவாகவே இருக்கும். விசுவாசிக்க வேண்டிய சத்தியம்: அத்திமரத்தில் கனியைத் தேடுகின்ற கர்த்தர் நம்மிடத்தில் கனியையே எதிர்பார்க்கின்றார். […]
4 பெப்ரவரி, 2022 வெள்ளி
? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: 2நாளா 20:1-30 நமது யுத்தத்தை நடத்துகிறவர்! …இந்த யுத்தம் உங்களுடையதல்ல: தேவனுடையது… நீங்கள் தரித்துநின்று கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள். 2நாளாகமம் 20:15,17 கடந்த இரு ஆண்டுகளாக நாட்டில் ஏற்பட்ட கொள்ளைநோயின் தாக்கத்தால் ஒருவித யுத்தத்திற்கு நாம் முகங்கொடுத்திருந்தோம். பல முயற்சிகள் எடுத்திருந்தும், கர்த்தரைத் தவிர இனிமேல் வேறு வழியே இல்லை என்று சொல்லுமளவுக்குக் காரியங்கள் நமது கைகளை மீறிப்போனதையெல்லாம் […]
3 பெப்ரவரி, 2022 வியாழன்
? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: யாத்திராகமம் 23:20-24 வழியிலே காப்பவர்! வழியிலே உன்னைக் காக்கிறதற்கு… இதோ நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன். யாத்திராகமம் 23:20 கள்வர்கள் நிறைந்த காடு வழியே ஒரு தேவ ஊழியர் பயணம் செல்ல நேரிட்டது. “நானும், நான் செல்லும் காரியமும் உம்முடையது” என்று ஜெபித்துவிட்டு, பாடித் துதித்துக்கொண்டு சென்றவேளை திடீரென ஒரு சலசலப்புச் சத்தம் கேட்டது. கள்வர்கள் ஞாபகம் வரவே […]
2 பெப்ரவரி, 2022 புதன்
? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: யோசுவா 23:1-16 வார்த்தைக்குக் கீழ்ப்படிந்திருப்போம்! …அப்படியே உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கட்டளையிட்ட அவருடைய உடன்படிக்கையை நீங்கள் மீறி… யோசுவா 23:15 “மகனே, வீட்டுப்பாடத்தைச் செய்துவை, ஒரு பரிசு தருவேன்” என்று சின்ன மகனிடம் கூறிவிட்டு வெளியே போகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுவோம். வேலை செய்த களைப்பையும் பொருட்படுத்தாமல், பரிசும் வாங்கிக்கொண்டு நீங்கள் வீட்டிற்கு வரும் போது, மகன் பாடமும் செய்யாமல், வீட்டையும் […]
யாரிடத்திலிருந்து உதவி வரும்?
சகோ.வஷ்னி ஏனர்ஸ்ட் “ஒரு வீதியில் நாம் நடந்து செல்லும் பொழுது, அல்லது ஒரு விபத்தில் அகப்பட நேரிடும்பொழுது, ஒரு பரீட்சைக்கு முகங்கொடுக்க நேரிடும்பொழுது, போக்குவரத்துப் பாதுகாப்பு அதிகாரிகளினால் சோதனைக்குள்ளாக்கப்படும் பொழுது, ஒரு தொழிலைத் தேடும்பொழுது, பொருளாதார விலைவாசி உயர்ந்துகொண்டே போகும்பொழுது, காரணமின்றி கைது செய்யப்படும்பொழுது, அல்லது நாம் கடத்தப்படும் பொழுது……“ இவ்வாறான சமயங்களில் நீங்கள் என்ன செய்வீர்கள்? ஆம், நாம் அத்தகைய நிமிடங்களில் செய்வதறியாது திகைத்து விடுகின்றோம். ஆயினும் எந்தவிதமான ஒரு பாதகமான சமயத்திலும்கூட நம்மைக் காப்பாற்றும், […]
உன்னில் தேவ மகிமை?
இ.வஷ்னி ஏனர்ஸ்ட்நன்றி : சத்தியவசனம் சஞ்சிகை. இலங்கை நான் ஆண்டவருக்காக ஊழியம் செய்ய விரும்புகிறேன், எனது வீட்டினை ஆண்டவருக்காக பயன்படுத்த விரும்புகிறேன், சபையில் பல நபர்களுக்கு முன்பாக, பாடல்கள் பாட விரும்புகிறேன், இசைக் கருவிகளை வாசிக்க விரும்புகிறேன், பிரசங்கம் பண்ண விரும்புகிறேன்… என தாலந்து பெற்ற பலர் எதையாகிலும் ஆண்டவருக்காக செய்ய வேண்டும் என வாஞ்சிப்பதுண்டு. அதில் எவ்வித தவறுமில்லைதான். ஆயினும், சாதிக்க வேண்டும், என்ற வாஞ்சையுள்ள நபர்களிடத்தில், ஆண்டவரின் மகிமை தன்னில் காணப்பட வேண்டுமென்ற சிந்தனையும் […]
1 பெப்ரவரி, 2022 செவ்வாய்
? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: 1 இராஜாக்கள் 8:54-62 வாக்குமாறாத தேவன்! தாம் வாக்குத்தத்தம் பண்ணியபடியெல்லாம் தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு இளைப்பாறுதலை அருளின கர்த்தருக்கு ஸ்தோத்திரம்… 1இராஜாக்கள் 8:56 இப் புதிய வருடத்திலும் ஒரு மாதத்தை வெகு சீக்கிரமாகவே கடந்து இன்னுமொரு மாதத்துக்குள் வந்துவிட்டோம். கடந்த நாட்களில் எத்தனை இன்னல்கள், முடக்கல்கள்! ஆனாலும் நம்மையெல்லாம் இம்மட்டும் நடத்திய தேவன் இன்னமும் நடத்துவார், வாக்கில் மாறாத கர்த்தர் நம்மோடு […]
31 ஜனவரி, 2022 திங்கள்
? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: உபாகமம் 32:1-44 உன்னை ஆட்கொண்டவர் அவரல்லவா! பூர்வநாட்களை நினை. தலைமுறை தலைமுறையாய்ச் சென்ற வருஷங்களைக் கவனித்துப் பார்… உபாகமம் 32:7 கடந்த ஆண்டின் கசப்புகள், பயங்கள். எதிர்பார்ப்புகள் யாவும் கடந்து ஒரு புதிய ஆண்டுக்குள் கர்த்தருடைய கிருபையால் நுழைந்த நாம் இன்று அதில் ஒரு மாதத்தையும் கடந்து வந்துவிட்டோம். மாதத்தின் கடைசி நாளாகிய இன்று, மோசேயின் இந்தப் பாடல்வரிகள் இன்று நம்மை […]
30 ஜனவரி, 2022 ஞாயிறு
? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: உபாகமம் 31:1-23 பரம கானான் சேருவோமா! கர்த்தர்தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருப்பார். …நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம்… உபாகமம் 31:8 மோசேக்கு இப்போது 120 வயது. அடுத்த தலைவனிடம் தலைமைத்துவத்தை முற்றிலுமாகப் பாரம்கொடுக்கும் நேரம் வந்துவிட்டது. “இந்த யோர்தானை நீ கடந்துபோவதில்லை என்று கர்த்தர் என்னோடே சொல்லியிருக்கிறார்” என்று ஜனங்களைப் பார்த்து மோசே சொன்னபோது, அவர் இருதயம் […]