21 நவம்பர், 2021 ஞாயிறு

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: யாக்கோபு 1:15, யூதா 5:7 விளையாடவேண்டாம்! பின்பு இச்சையானது கர்ப்பம் தரித்து பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது மரணத்தை பிறப்பிக்கும். யாக்கோபு 1:15 இந்தியாவிலே நீலகிரி என்ற மலைத்தொடரில் ஆட்டுக்குட்டிப் பாறை என்ற ஒரு பாறை இருக்கிறது. இப்பாறை மிகவும் சரிவானதொன்று. இந்தப் பாறையின்மேல் ஆட்டுக்குட்டி கள் ஏறி அந்தப் பாறையின் ஓரம்வரை சென்று விளையாடும். இப்படியாக அந்த பாறை யின் […]

20 நவம்பர், 2021 சனி

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: லூக்கா 10:29-37 எனக்குப் பிறன் யார் …காயங்களில் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து, காயங்களைக் கட்டி, …அவனைப் பராமரித்தான். லூக்கா 10:34 தேவனுடைய செய்தி: நாம் சக மனிதரிடம் இரக்கம் காட்டுவதைத் தேவன் எதிர்பார்க்கின்றார். தியானம்: திருடர்கள் கையில் மாட்டிக்கொண்ட ஒரு வழிப்பயணி இறக்கும் தருவாயில் கிடந்தான். ஒரு ஆசாரியன், ஒரு லேவியன் அவ்வழியாக சென்றும் உதவி செய்யவில்லை. காயமுற்ற அம் மனிதனிடம் […]

19 நவம்பர், 2021 வெள்ளி

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: யாக்கோபு 1:13-14 சுய இச்சை அவனவன் தன்தன் சுயஇச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகின்றான். யாக்கோபு 1:14 கைத்தொலைபேசியைத் தட்டிப் பார்க்கிறபோது பல காட்சிகளைக் காண நேரிடுகிறது. அவற்றில் நல்லதும் இருக்கும், கெட்டதும் ஆபாசமானதும் இருக்கும். முதற்பார்வை தவறல்ல, ஏனெனில் அவை தாமாகவே தெரிகின்றன. ஆனால், தகாதது என்று தெரிந் தும் அதே காட்சியைத் மீண்டும் பார்ப்பதற்குத் தூண்டப்படுவோமானால், நாமே நம்மை சோதனைக்குள் […]

18 நவம்பர், 2021 வியாழன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: 1கொரி 10:12-13 சோதனையா? இப்படியிருக்க தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன். 1கொரிந்தியர் 10:12 விழுந்துபோன இந்த உலகில் சோதனைகளைத் தவிர்க்கவே முடியாது. ஆனால், கர்த்தர் நம்மைத் தீமையினால் சோதிக்கிறவர் அல்ல. நாமேதான் சுயஇச்சையினால் இழுவுண்டு சோதிக்கப்படுகிறோம் என்கிறார் யாக்கோபு (1:12-15). நாம் இச்சைக்கு இடமளிக்கும்போது சத்துரு அந்த இடத்தில் நம்மை வீழ்த்திப்போட விரைந்து வருவான். சோதனையைச் சந்திக்காத ஒரு மனிதனும் […]

17 நவம்பர், 2021 புதன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: 1பேதுரு 1:1-3, 1:23-25 பிரசங்கி எல்லாமே மாயைதானா? மாயை மாயை எல்லாம் மாயை என்று பிரசங்கி சொல்லுகிறான். பிரசங்கி 1:2 “மாயை, எல்லாமே பொய்” என்று அநேகர் சொல்லுவதுண்டு. ஒருவேளை சில நேரங் களில் நாமே கூறியிருப்போம். வாழ்வில் எதிர்பாராமல் முகங்கொடுக்க நேரிடுகின்ற பிரச்சனைகளை மேற்கொள்ள முடியாமல், அதனால் ஏற்படுகின்ற தோல்விகளும், அதைத் தொடர்ந்த விரக்தியுமேதான் இந்த மனநிலைக்கு முக்கிய காரணம் […]

16 நவம்பர், 2021 செவ்வாய்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு:  பிலிப்பியர்  1:9-11 என் ஜெபம் எப்படிப்பட்டது? நீங்கள் கிறிஸ்துவின் நாளுக்கென்று துப்புரவானவர்களும் இடறலற்றவர்களுமாயிருக்கவும் வேண்டுதல் செய்கிறேன். பிலிப்பியர் 1:11 நெருக்கடி மிக்க இந்த நாட்களில் ஜெபத்தில் கரிசனையற்றிருந்தவர்களும் ஊக்கமாக ஜெபிக்கிறார்கள் என்பது உண்மை. கோவிட் தொற்று நம்மையெல்லாம் அந்த நிலைக் குத் தள்ளியேவிட்டது. ஆனால், நமது ஜெபம் எப்படிப்பட்டது? எதற்காக ஜெபிக்கிறோம்? என்ன மனநோக்குடன் ஜெபிக்கிறோம் என்பதையெல்லாம் சிந்திப்பது குறைவு என்றுதான் […]

15 நவம்பர், 2021 திங்கள்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: மத்தேயு 6:21, யோவான் 12:1-6 என் இருதயம் எங்கே? உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ, அங்கே உங்கள் இருதயமும் இருக்கும். மத்தேயு 6:21 நம்முடைய கை விரல்களை இறுகப் பொத்திப்பிடித்தால் அதுதான் நமது இருதயத் தின் அளவு என்று சொல்லுவார்கள். இந்த இருதயமே நாம் உயிர் வாழ்வதற்கு நமது சரீரத்தை இயக்குகின்ற பெரிய இயந்திரம். இந்த மாம்ச இருதயம் சிறியதாக இருந்தாலும், நமது […]

14 நவம்பர், 2021 ஞாயிறு

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: மத்தேயு 6:22-23, நியா 14:1-3 உன் கண்கெட்டதாயிருந்தால்… உன் கண் கெட்டதாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும்… மத்தேயு 6:23 கண் பார்வையற்றவர்கள் எப்படிப்பட்ட இருளை அனுபவிக்கிறார்கள் என்பதை நாம் சோதித்துப் பார்த்திருக்கிறோமா? ஒரு கறுப்புத் துணியினால் கண்களை இறுக மூடிக் கட்டினாலும்கூட ஒரு சிறு மங்கல் ஒளிதன்னும் நமக்குத் தெரியும். ஆனால், கண் பார்வை தெளிவாக இருந்தும், இன்று பலருடைய […]

13 நவம்பர், 2021 சனி

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: லூக்கா 10:21-28 நித்தியமான வாழ்வு …நீங்கள் காண்கிறவைகளைக் காணுங் கண்கள் பாக்கியமுள்ளவைகள். லூக்கா 10:23 தேவனுடைய செய்தி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழுப் பலத்தோடும் உன் முழுச்சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக.  தியானம்: தங்களை நீதிமான் என்று காண்பிக்க மனதாய் வாழ்பவர்கள் அநேகர். ஆனால், இயேசுவோ, பிதா யார் […]

12 நவம்பர், 2021 வெள்ளி

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: மத்தேயு 6:14-15, 18:21-35 மன்னியாவிட்டால்… மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார். மத்தேயு 6:15 “மன்னிப்பு” என்பது ஒரு அழகான தெய்வீக குணம். அது பெற்றுக்கொள்பவரை அழகுபடுத்துவதைப் பார்க்கிலும் கொடுப்பவரையே அதிகமாக அழகுபடுத்தும். நாம் ஏதாவது தவறு செய்தால், பிறர் நம்மை மன்னிக்கவேண்டும் என்று விரும்புகின்றோம்; ஆனால் நமக்கு எதிராக பிறர் குற்றம் செய்தால் […]

Solverwp- WordPress Theme and Plugin