3 ஒக்டோபர், ஞாயிறு 2021

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: எஸ்றா 4:15-18 எழுதிவைப்போம். நீங்கள் அனுப்பின மனு நமது சமுகத்தில் தீர்க்கமாய் வாசிக்கப்பட்டது. எஸ்றா 4:18 மற்றவரைக் குற்றப்படுத்தி அவரது முழு வாழ்வையுமே நாசப்படுத்திவிட எண்ணும் ஒருவர், அக்குற்றத்தை நிரூபிக்கவேண்டும் என்பதற்காக ஏதேதோ வழிமுறைகளைக் கையாளுவதுண்டு. அதில் முக்கியமானது எழுத்தில் பொறிக்கப்பட்ட நிரூபணம். அநேக வருடங்களுக்குமுன், ஒருவர் ஒரு ஸ்தாபனத்தில் பணிபுரியவேண்டுமென்று வந்தார். அவர் வந்த பின்னர் சில முக்கிய பொருட்கள் காணாமற்போயின. இவரைக் […]

2 ஒக்டோபர், சனி 2021

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 9:1-11 சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள் தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவும், பிணியாளிகளைச் சொஸ்தமாக்கவும் அவர்களை அனுப்பினார். லூக்கா 9:2 தேவனுடைய செய்தி: ஜனங்களை அவர் ஏற்றுக்கொண்டு, தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்து அவர்களுடனே பேசி, சொஸ்தமடைய வேண்டுமென்றிருந்தவர்களைச் சொஸ்தப்படுத்தினார். தியானம்: இயேசு பன்னிரண்டு சீஷரையும் வரவழைத்து, சகல பிசாசுகளையும் துரத்தவும், வியாதியுள்ளவர்களைக் குணமாக்கவும் அவர்களுக்கு வல்லமை யும் அதிகாரமும் அளித்தார். தேவனுடைய ராஜ்யத்தைப் பற்றிய செய்தியை பிரசங்கிக்கவும், நோயாளிகளைக் […]

1 ஒக்டோபர், வெள்ளி 2021

? சத்தியவசனம் – இலங்கை. ?? [] ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: எஸ்தர் 3:1-9 தந்திரமான பரிவு …நாங்கள் அரமனை உப்புத் தின்கிறபடியினால், ராஜாவுக்குக் குறைவுவரப் பார்த்திருக்கிறது எங்களுக்கு அடாதகாரியம். எஸ்றா 4:14 தமக்கு நயம்வேண்டி, உரியவரைக் கைக்குள்போட்டு, காரியத்தைக் கச்சிதமாக முடிக்கிறவர்கள் இன்று மாத்திரமல்ல, அன்றும் இருந்தார்கள். ஆமானுக்கு, மொர்தெகாயையும் யூத ஜாதியையும் அழிக்கவேண்டும். ஆனால் எஸ்தர் ராணியின் நிமித்தம் அது கூடாத காரியமாயிருந்தது. காரியம் ஆகவேண்டுமானால் ராஜாவின் மனதைத் திருப்பவேண்டும். ஆகவே, அவர்கள் […]

30 செப்டெம்பர், வியாழன் 2021

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: அப்போஸ்தலர் 16:16-24 வருமானத்திற்கு நஷ்டம் இப்போதும் …ராஜாக்களின் வருமானத்திற்கு நஷ்டம் வரும் என்று ராஜாவுக்கு அறியலாவதாக. எஸ்றா 4:13 மனுஷர் எத்தனைவிதமாக ஆதாயத்தைத் தேடுகிறார்கள்! பிலிப்பிய பட்டணத்திலே குறி சொல்லுகிறதினால் தன் எஜமான்களுக்கு மிகுந்த ஆதாயத்தை உண்டாக்கின ஒரு பெண் இருந்தாள். அவளைப் பீடித்திருந்த குறி சொல்லும் ஆவியை பவுல், இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே துரத்திவிட்டார். இதனால் தங்கள் ஆதாயத்து நம்பிக்கை அற்றுப்போயிற்று என்று […]

29 செப்டெம்பர், புதன் 2021

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: தானியேல் 6:1-9 மனுவின் நகலாவது அவர்கள் அர்தசஷ்டா என்னும் ராஜாவுக்கு மனுவின் நகலானது: நதிக்கு இப்புறத்தில் இருக்கிற உமது அடியார் முதலானவர்கள் அறிவிக்கிறது: எஸ்றா 4:11 வேலைகளைத் தடுப்பதும், அதற்காகக் கைக்கூலி கொடுப்பதும், அடுத்தவருக்கு விரோதமாகப் பிராது மனுக்கள் அதாவது குற்றப் பத்திரிக்கைகள் எழுதுவதும் இன்று போலவே அன்றும் நடந்தது. தானியேலின் காலத்தில், அவன்மீது எரிச்சல்கொண்ட அதிகாரிகள், அவனிலே குற்றம்பிடிக்க வகைதேடினார்கள். எதுவும் காணப்படாதபோது, […]

28 செப்டெம்பர், செவ்வாய் 2021

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: எஸ்றா 4:4-10 மனந்தளர வேண்டாம்! நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன். உன்மேல் என் கண்ணைவைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன். சங்கீதம் 32:8 சுவிற்சர்லாந்து தேசத்திலே, தேவனுக்குப் பயந்து வாழ்ந்த ஒரு பொலீஸ் அதிகாரிக்கும் அவரது மனைவிக்கும், இரண்டு கைகள் இல்லாமலும், ஒரு கால் பெலனற்ற நிலையிலும் ஒரு மகள் பிறந்தாள். கர்ப்பத்திலேயே இதை அறியவந்தபோதும், பெற்றோர் தமது மனதைத் […]

27 செப்டெம்பர், திங்கள் 2021

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: யோசுவா 9:1-27 நாங்களே கட்டுவோம்! …எங்கள் தேவனுக்கு ஆலயத்தைக் கட்டுகிறதற்குஉங்களுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை. எஸ்றா 4:3 யோசுவாவின் நாட்களில் எரிகோவிலும் ஆயியிலும் நடந்ததைக் கேள்விப்பட்ட எல்லா ஜாதியினரும் இஸ்ரவேலின் தேவனுக்குப் பயந்தார்கள். ஒருசிலர் ஒன்றுகூடி இஸ்ரவேலுக்கு எதிராக யுத்தத்துக்கு ஆயத்தப்படுத்த, கிபியோனின் குடிகளோ தந்திரமான யோசனைபண்ணினார்கள். அருகிலிருந்த அவர்கள், தூரத்திலிருந்து வருகிறவர்கள்போல நடித்து, தம்மை உயிரோடே காக்கும்படி, யோசுவாவையும் பிரபுக்களை யும் ஏமாற்றினார்கள். இஸ்ரவேலர் […]

26 செப்டெம்பர், ஞாயிறு 2021

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: ஆதியாகமம் 26:25-33 எச்சரிக்கை அவர்கள்… நாங்களும் பலியிட்டு வருகிறோம் என்று அவர்களோடே சொன்னார்கள். எஸ்றா 4:2 இன்றைய வேதவாசிப்புப் பகுதியில், ஈசாக்கை எதிர்த்தவர்களே இப்போது ஈசாக்கை தேடி வருகிறார்கள். “என்னைப் பகைத்து துரத்திவிட்ட நீங்கள் எதற்காக வருகிறீர்கள்” என்று ஈசாக்கு கேட்டபோது, “நிச்சயமாய்க் கர்த்தர் உம்மோடேகூட இருக்கிறார் என்று கண்டோம்” என்று சொல்லி, ஆணையிட்டுக் கொண்டார்கள். இவர்கள் ஈசாக்கு உடன் ஒரு ஏற்பாடு செய்வதற்காக […]

25 செப்டெம்பர், சனி 2021

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 8:43-48 வைத்தியர்களைவிட மேலானவர் என்னிலிருந்து வல்லமை புறப்பட்டதை அறிந்திருக்கிறேன். ஆதலால் ஒருவர் என்னைத் தொட்டதுண்டு… லூக்கா 8:46 தேவனுடைய செய்தி: “என்னிலிருந்து வல்லமை புறப்பட்டதை அறிந்திருக்கிறேன்” – இயேசு. தியானம்: தன் சொத்து முழுவதையும் மருத்துவரிடம் செலவழித்தும் குணமடையாமல், பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப்போக்கினால் வருந்திய பெண், இயேசுவின் வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள், உடனே அவளுடைய பெரும்பாடு நின்றுபோயிற்று. அவள் பிணி நீங்கியதையும், இயேசுவின் […]

24 செப்டெம்பர், வெள்ளி 2021

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: யோபு 1:6-11 சத்துருக்கள் கேள்விப்படுவார்கள் சிறையிருப்பிலிருந்து வந்த ஜனங்கள் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஆலயத்தைக் கட்டுகிறார்கள் என்று …சத்துருக்கள் கேள்விப்பட்டபோது… எஸ்றா 4:1 தேவனால் ஏவப்பட்டு, கோரேஸ் ராஜாவிடம் உத்தரவு பெற்றுக்கொண்டு, தேவனுடைய ஆலயத்தைக் கட்டியெழுப்ப வந்திருந்தாலும், அவர்களுக்குச் சத்துருக்களின் இடையூறுகள் இருக்கத்தான் செய்தன. இந்தச் சத்துருக்கள் யார்? இஸ்ரவேலர் தேவனுக்கு விரோதமாக நடந்ததால், அசீரியரின் கைகளில் விழுந்தார்கள். இஸ்ரவேலின் வட ராஜ்யம் விழுந்தது. […]

Solverwp- WordPress Theme and Plugin