3 செப்டெம்பர், வெள்ளி 2021

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: தானியேல் 2:19-23 தேவன் உயர்த்தும்போது பூமியின் ராஜ்யங்களையெல்லாம் எனக்குத் தந்தருளி… எருசலேமிலே தமக்கு ஆலயத்தைக் கட்டும்படி எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார். எஸ்றா 1:2 தேவன் நமக்கு ஒரு உயர்வைத் தந்துவிட்டால் தேவனுக்கு நன்றிசொல்லி, சாட்சி சொல்லி மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம், அது நல்லது. ஆனால் சிலநாட்களுக்குள் நம்மில் அநேகர் அந்த நிலைமைக்கு தம்மைக் கொண்டுவந்த தேவனை மறந்து, நம் இஷ்டத்தில் வாழ முற்படுகிறோம் என்றால் மறுக்கமுடியுமா? தங்கள் […]

2 செப்டெம்பர், வியாழன் 2021

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 2நாளாகமம் 36:21-23 கர்த்தரின் வார்த்தை நிறைவேறும் கர்த்தர் பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் ஆவியை ஏவினதினாலே அவன்… எஸ்றா 1:1 “நான் செய்ய நினைத்தது எதுவும் தடைப்படாது” என்று வாக்கருளிய தேவன், தாம் செய்ய நினைத்ததைச் செய்வான் என்று எதிர்பார்த்தவன் தன்னைக் கடினப்படுத்தி மறுத்தாலும், இன்னொருவன்மூலமாகத் தனது காரியத்தை நிச்சயம் செய்துமுடிப்பார். அவருடைய நாமம் தரித்த இஸ்ரவேலின் ராஜாக்கள் தங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தினாலும், நீடிய பொறுமையாக […]

1 செப்டெம்பர், புதன் 2021

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 2நாளாகமம் 36:10-20 கர்த்தரின் வார்த்தை நிறைவேறும் எரேமியாவின் வாயினாலே கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறும்படி… எஸ்றா 1:1 காலாகாலமாக அநேக தேவனுடைய பிள்ளைகள் தமது வாயினாலே கர்த்தருடைய வார்த்தைகளை உரைக்கிறார்கள். அவற்றில் சில நிறைவேறுவதைக் காண்கிறோம். சில ஏன் நிறைவேறாமல் இருக்கின்றன என யோசிக்கிறோம். நிறைவேறாமற் போவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சிலசமயம் மனிதருடைய கீழ்ப்படியாமையால் அவை நிறைவேறத் தாமதமாகலாம். சிலசமயம் தேவன் சொல்லாததையும் […]

31 ஆகஸ்ட், செவ்வாய் 2021

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 2இராஜாக்கள் 5:20-37 பொருளாசை …நாகமானின் குஷ்டரோகம் உன்னையும், உன் சந்ததியையும் என்றைக்கும் பிடித்திருக்கும் என்றான். உடனே அவன் …குஷ்டரோகியாகி, 2இராஜாக்கள் 5:37 தான் தொட்டதெல்லாம் பொன்னாக விளங்கவேண்டும் என்று ஆசைப்பட்டு வரங்கேட்டு பெற்றுக்கொண்ட அரசன், தனது உணவைத் தொட்டதும் அதுவும் பொன்னாகியதாம், தண்ணீரைத் தொட்டால் அதுவும் பொன்னாகியது. இறுதியில் உணவின்றியே அவன் செத்துமடிந்ததாக ஒரு கதை உண்டு. இதுதான் பொருளாசை. நாகமான், எலிசாவுக்கு வெகுமதி […]

30 ஆகஸ்ட், திங்கள் 2021

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 2இராஜாக்கள் 5:9-19 நாகமான் குணமடைதல் …தன் கையினால் அந்த இடத்தைத் தடவி இவ்விதமாய்க் குஷ்டரோகத்தை நீக்கிவிடுவான் என்று எனக்குள் நினைத்திருந்தேன். 2இராஜாக்கள் 5:11 இயேசுவைச் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டுவிட்டால், தடையின்றிப் பரலோகம் செல்லலாம் என்று பலர் நினைப்பதுண்டு. இவர்கள் பாடு அனுபவிக்கவோ, சிலுவை சுமக்கவோ, உலகத்தை எதிர்த்து வாழவோ பிரியப்படமாட்டார்கள். மொத்தத்தில் எந்தக் கஷ்டமும் படுவதற்கு தயாராக இல்லாத ஒரு கூட்டத்தைச் சேர்ந்தவர் களாகவே […]

29 ஆகஸ்ட், ஞாயிறு 2021

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 2இராஜாக்கள் 5:1-9 சிறுபெண் சொன்ன நற்செய்தி என் ஆண்டவன் சமாரியாவிலிருக்கிற தீர்க்கதரிசியினிடத்தில் போவாரானால் நலமாயிருக்கும். அவர் இவருடைய குஷ்டரோகத்தை நீக்கிவிடுவார்… 2இராஜாக்கள் 5:3 தற்கொலை செய்ய நினைத்த ஒரு பெண், மருந்துக்கடையில் தூக்கமாத்திரைகளை வாங்கினாள். கடைக்காரரும் அந்த மாத்திரைகளை ஒரு கடதாசியில் சுற்றிக் கொடுத்துவிட்டார். மாத்திரைகளை விழுங்குவதற்காக அவள் அந்தப் பொதியைத் திறந்தாள். அந்தக் கடதாசியில் எழுதப்பட்டிருந்த ஒரு வேதவசனம் அவள் இருதயத்தை உடைத்தது. […]

28 ஆகஸ்ட், சனி 2021

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 8:16-21 தேவ வசனத்தின்படி நட! தேவனுடைய வசனத்தைக் கேட்டு, அதின்படி செய்கிறவர்களே எனக்குத் தாயும் எனக்குச் சகோதரருமாயிருக்கிறார்கள்… லூக்கா 8:21 தேவனுடைய செய்தி: விளக்கை ஏற்றி, உள்ளே வருவோருக்கு ஒளி கிடைக்கும்படி அதை விளக்குத்தண்டின் மீது வைப்பதுண்டு. அப்போது உள்ளே பிரவேசிக்கிறவர்கள் அதின் வெளிச்சத்தைக் காண்பார்கள். தியானம்: இயேசுவின் தாயும் சகோதரர்களும் இயேசுவிடம் வந்தபோதிலும் மக்கள் திரளாக இருந்த காரணத்தால் அவரை அணுகமுடியவில்லை. […]

27 ஆகஸ்ட், வெள்ளி 2021

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 2இராஜாக்கள் 4:42-44 அப்பங்கள் பெருகின! அப்பொழுது அவர்களுக்கு முன்பாக அதை வைத்தான், கர்த்தருடைய வார்த்தையின்படியே அவர்கள் சாப்பிட்டதுமன்றி, மீதியும் இருந்தது. 2இராஜாக்கள் 4:44 இன்றும் பல இடங்களில் அற்புத அடையாளங்கள் நடைபெறத்தான் செய்கின்றன. ஆனால், இவற்றினால் தேவனுடைய நாமம் மகிமைப்படுகிறதா என்பதே கேள்வி. மனிதரின் பெயரும், ஊழியங்களின் பெயரும்தான் அதிக பிரபல்யமடைவதை மறுக்க முடியாது. ஆனால் எலிசாவோ இதற்கெல்லாம் விதிவிலக்கானவராக காணப்படுகிறார். எலியாவைப் பின்பற்றி […]

26 ஆகஸ்ட், வியாழன் 2021

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 2இராஜாக்கள் 4:8-16 சாட்சியுள்ள வாழ்வு அவள் தன் புருஷனை நோக்கி: இதோ, நம்மிடத்தில் எப்போதும் வந்துபோகிற தேவனுடைய மனுஷனாகிய இவர் பரிசுத்தவான் என்று காண்கிறேன். 2இராஜாக்கள் 4:9 அந்தியோகியாவிலே இயேசுவின் சீஷர்களுக்கு கிறிஸ்தவர்கள் என்ற பெயர் சூட்டப்பட்டது. அவர்கள் கிறிஸ்துவின் போதனைகளைப் பின்பற்றுகிறவர்களாகவும், கிறிஸ்து செய்த காரியங்களைச் செய்து, அவரையே போதிக்கிறவர்களுமாய் இருந்தார்கள். இன்று நாம் நம்மைக் கிறிஸ்தவர்கள் என்று சொல்லுவதற்கு முன்பதாக, நம்மையும், […]

25 ஆகஸ்ட், புதன் 2021

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 2இராஜாக்கள் 4:1-7 கர்த்தரின் ஆசீர்வாதம் …அவள்…இன்னும் ஒரு பாத்திரம் கொண்டுவா என்றாள். அதற்கு அவன் வேறே பாத்திரம் இல்லை என்றான், அப்பொழுது எண்ணெய் நின்று போயிற்று. 2இராஜாக்கள் 4:6 சகல வசதிகளுடன் வாழுகின்ற தன் மகன், ஏழ்மையையும் உணரவேண்டும் என்று எண்ணிய தகப்பன், மிகவும் வறியவர்கள் வாழும் ஒரு பகுதிக்கு அவனை அழைத்துச் சென்றார். பின்னர், “அங்கே அவன் கண்டது என்ன” என்று மகனிடம் […]

Solverwp- WordPress Theme and Plugin