1 ஜுன், 2021 செவ்வாய்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: சங்கீதம் 92:1-5 நன்றியுள்ள உள்ளம் கர்த்தரைத் துதிப்பதும், உன்னதமானவரே, உமது நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுவதும்…நலமாயிருக்கும். சங்கீதம் 92:1,3 வருடத்தின் பாதிக்குள் கடந்துவந்துவிட்டோம். இந்த இடத்தில் நின்று நாம் தேவனைத் துதிப்போமா? அல்லது பாரமான இதயத்தோடு மௌனம் சாதிப்போமா? வாழ்வில் மிகவும் இலகுவான விடயம், குறைகள் கூறுவதும், குறைவுகளைக் குறித்துப் பேசுவதும் தான். ஆனால், உள்ளத்தின் ஆழத்திலிருந்து தேவனைத் துதிப்பதற்கோ நாம் காரணங்களைத் தேடி அலைவோம். இன்று, […]

31 மே, 2021 திங்கள்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: சங்கீதம் 51 உடைந்த கண்ணாடித் துண்டுகள் தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும். நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும். சங்கீதம் 51:10 அருமையானதொரு முகம்பார்க்கும் கண்ணாடி, விழுந்து, பல துண்டுகளாக உடைந்து கிடந்தது. இப்போது என்ன தோன்றும்? ‘பாவத்தில் விழுகிறவன் வாழ்வும் இப்படித்தான் துண்டுதுண்டாகிறது’ என்றார் ஒருவர். ‘இதனால் இனி உபயோகம் இல்லை’ என்றார் இன்னொருவர். ஆனால், ஒரு வாலிபன் என்ன சொன்னான் […]

30 மே, 2021 ஞாயிறு

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: யோசுவா 1:1-9 ஒரே வழி …இரவும் பகலும் அதைத் தியானித்துக் கொண்டிருப்பாயாக. அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய்… யோசுவா 1:8 ‘அவசரம்’ தியானத்திற்கு உதவாது. தேவனோடு உறவுகொள்ளும் தியானம் இல்லாவிட்டால் வாழ்வில் வெற்றி கிடையாது. தேவனுக்குள்ளான வெற்றி இல்லாவிட்டால் தேவனுக்காக எதையும் சாதிக்கவும் முடியாது. அந்தச் சாதனை இல்லாவிட்டால் நாம் வாழ்ந்து என்ன பயன்? வாழ்வின் நோக்கம் பரலோக பிரவேசம் அல்ல; தேவனுக்கு […]

29 மே, 2021 சனி

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 6:17-19 இயேசுவின் நாமத்தில் சுகமுண்டு. தங்கள் வியாதிகளினின்று குணமாக்கப்படும்படிக்கும், …வந்தவர்களாகிய திரளான ஜனங்களும் இருந்தார்கள்.லூக்கா 6:17 தேவனுடைய செய்தி: இயேசு தமது வல்லமையினால் அநேகரை குணமாக்கினார். தியானம்: இயேசுவானவர் தமது சீஷர்களுக்கு உபதேசித்தார். அநேகர் தேவ வசனத்தைக் கேட்டார்கள். அத்துடன் மக்களிடமிருந்த வியாதிகளிலிருந்து அவர்களை இயேசு குணமாக்கினார். அசுத்த ஆவிகளால் வாதிக்கப்பட்ட வர்களும் வந்து, ஆரோக்கியமடைந்தார்கள். விசுவாசிக்க வேண்டிய சத்தியம்: …இயேசு கிறிஸ்துவின் […]

28 மே, 2021 வெள்ளி

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: யோவான 20:24-29 காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது எபிரெயர் 11:1 ‘அவரை நீங்கள் காணாமலிருந்தும் அவரிடத்தில் அன்புகூருகிறீர்கள்@ இப்பொழுது அவரைத் தரிசியாமலிருந்தும் அவரிடத்தில் விசுவாசம் வைத்து, சொல்லிமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளவர்களாய் களிகூர்ந்து, உங்கள் விசுவாசத்தின் பலனாகிய ஆத்துமரட்சிப்பை அடைகிறீர்கள்” (1பேதுரு 1:8-9).  நம்பிக்கை என்பது நமக்கு வாக்குக்கொடுப்பவர் இன்னார் என்பதில் தங்கியிருக்கிறது. கர்த்தர் சொன்னால் அவர் செய்வார் என்பதில் […]

27 மே, 2021 வியாழன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: எரேமியா 17:5-8, 2நாளா14:1-7 கர்த்தரையே நம்பி ஜீவிப்போம்! மனுஷனை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம். சங்கீதம் 118:8 நமது வாழ்வில் தேவைகள், கஷ்டங்கள் உருவாகும்போது முதலில் யாரை நாம் நோக்கிப் பார்க்கிறோம்? கர்த்தரையா? மனுஷரையா? ஆற்றில் விழுந்து தத்தளிக்கும் ஒருவன், தான் தப்புவதற்கு ஆற்றோரத்தில் வளர்ந்து பரந்த மரத்தின் பலமுள்ள கிளையைத் தேடிப்பிடிப்பானேதவிர, பலமற்ற மெல்லிய கிளையைப் பற்றிபிடிக்கமாட்டான். கார்மேகம்போல் கஷ்டங்கள் சூழும்போது, […]

26 மே, 2021 புதன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: யோனா 2:1-10 கீழ்ப்படிவும் பகுத்தறிவும் பொய்யான மாயையைப் பற்றிக்கொள்ளுகிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையைப் போக்கடிக்கிறார்கள் யோனா 2:8 மூன்று நண்பர்கள் பெற்றோருக்குத் தெரியாமல் சுற்றுலா போகத் திட்டமிட்டு தமது நண்பனையும் அழைத்தனர். நண்பனோ படிப்பையும் பணத்தையும் வீட்டையும் எண்ணி வர மறுத்ததோடு அவர்களையும் தடுத்தான். அவர்களோ அவனைத் தட்டிவிட்டுப் புறப்பட்டுப் போய்விட்டார்கள். நாட்கள் கடந்தன. பணமும் கரைந்தது. பணம் சம்பாதிக்க, தேநீர் சாலை, உணவகம், […]

25 மே, 2021 செவ்வாய்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: எண்ணாகமம் 13:17-14:9 ஒப்பீடு ஒரு ஒவ்வாமை கர்த்தர் நம்மேல் பிரியமாயிருந்தால், அந்தத் தேசத்திலே நம்மைக் கொண்டுபோய், பாலும் தேனும் ஓடுகிற அந்தத் தேசத்தை நமக்குக் கொடுப்பார். எண்.14:8 எந்த நிலைமையிலும் மனத்திருப்தியும், மனரம்மியமுமே மனிதனுக்கு மகிழ்ச்சியான வாழ்வைக் கொடுக்கும். மாறாக, ஒருவன் எப்போது தன் வாழ்வை, பிறருடைய வாழ்வுடன் ஒப்பீடு செய்துபார்க்க ஆரம்பிக்கிறானோ, அதுவே சறுக்கலுக்கு ஏதுவாகிவிடும். ஒருவன் தன்னைப் பார்க்கிலும் அடுத்தவன் வாழ்வு […]

24 மே, 2021 திங்கள்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: யோவான் 10:22-29 மந்தையின் ஆடுகள் நான் உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் என் மந்தையின் ஆடுகளாயிராதபடியினால் விசுவாசியாமலிருக்கிறீர்கள். யோவான் 10:26 தனது மகனுடைய வேலைக்காக அவனுடைய தாயார் விசுவாசத்துடன் ஜெபித்து பொறுமையோடு காத்திருந்தாள். ஆனால் மற்றவர்களோ, ‘கடவுளல்ல, மனுஷர்தான் வேலை தரவேண்டும். காலம் கடத்தாமல், அரசியல்வாதிகள் உதவியை நாடுங்கள், அவர்களுடைய சிபாரிசு கிடைத்துவிட்டாலே வேலை கிடைத்ததற்குச் சமம்” என்று யோசனை கூறினார்கள். இந்த வார்த்தைகள் அத் […]

23 மே, 2021 ஞாயிறு

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: ஆதியாகமம் 40:1-23 ஏற்ற காலத்தில் சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமாவான். கர்த்தராகிய நான் ஏற்றகாலத்தில் இதைத் தீவிரமாய் நடப்பிப்பேன். ஏசாயா 60:22 ‘ஏற்ற காலத்தில் கர்த்தர் செய்வார்’ என்று ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் அடிக்கடி சொல்லுவார். ஆனால் உறவினரோ, ஓய்வுபெற்றுவிட்ட இவரால் எப்படிப் பெண்பிள்ளைகளை வாழவைக்கமுடியும் என்று அவரை நோகடிப்பார்களே தவிர, அவருக்கு யாரும் உதவிட முன்வரவில்லை. ஆனால் அவரோ, யாருக்கும் செவிசாய்க்காமல், […]

Solverwp- WordPress Theme and Plugin