1 மார்ச், 2021 திங்கள்
? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: மத்தேயு 23:10-14 பரிசேயராகிவிட்டோமோ! ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார். லூக்கா 18:14 எந்த அசுத்தங்களும், தொற்றுக்களும் நம்மில் ஒட்டிவிடாதபடி முகக்கவசம் அணிந்து தான் ஆலயத்துக்குள்ளேயே நுழைகிறோம். கைகளை செனிட்டைசர், சோப் போட்டுக் கழுவுகிறோம். ஈரமாக்கப்பட்ட கால்துடைப்பத்தில் கால்களைத் துடைத்துவிட்டு ஆலயத்துக்குள் மிகவும் சுத்தமானவர்கள்போலவே பிரவேசிக்கிறோம். உள்ளேயும் பிறரிலிருந்து நமக்கு எதுவும் தொற்றிவிடாதபடிக்குத் தள்ளியே உட்கார்ந்து கொள்ளுகிறோம். இவைகள் எல்லாமே […]
28 பெப்ரவரி, 2021 ஞாயிறு
? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி : 1சாமுவேல் 17:4-7, 45-50 பயத்தை எதிர்கொள்; யுத்தம் கர்த்தருடையது, அவர் உங்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான். 1சாமுவேல் 17:47 பொதுவாக ஒரு பிரச்சனையோ அல்லது எம்மால் கையாளமுடியாத சூழ்நிலையோ எதுவாக இருந்தாலும் ஒரு ஆலோசகரை நாம் நாடுவதுண்டு. அப்போது அவர், ‘உங்கள் பிரச்சனை எவ்வளவு பெரியது என்று ஒரு கோடு வரைந்து காட்டுங்கள்” என்பார். பின்னர் அதற்குப் பக்கத்தில் நாம் வரைந்ததைவிட […]
27 பெப்ரவரி, 2021 சனி
? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி : லூக்கா 4:1-13 சோதனைகள் மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் லூக்கா 4:4 தேவனுடைய செய்தி: உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக. தியானம்: இயேசுவானவர் சோதிக்கப்பட்டார். அந்தச் சோதனைகளுக்கு அவர் எவ்வாறு முகங்கொடுக்கிறார் என்பதை இப்பகுதியிலே நாம் காணலாம். விசுவாசிக்க வேண்டிய சத்தியம்: ஆவியானவரால் நிறைந்திருப்பின், எமக்கு பாவச் சோதனைகள் வராது என்று தப்பபிப்ராயம் […]
26 பெப்ரவரி, 2021 வெள்ளி
? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி : 2சாமுவேல் 22:26-30 வழிநடத்தும் ஒளி கர்த்தராகிய தேவரீர் என் விளக்காயிருக்கிறீர், கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குகிறவர். 2சாமுவேல் 22:29 இலங்கையின் யுத்தகாலத்தில் மின்சார வசதி இல்லாத இடங்களில் விளக்குகளைத் தான் இரவில் பற்றவைப்பார்கள். பின்பு மண்ணெண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டபோது, ஜாம் போத்தல்களில் சிறிதளவு எண்ணெய் விட்டு விளக்குளைச் செய்து உபயோகித்தனர். அது சிறிய வெளிச்சமாக இருந்தாலும் அந்தக் கும்மிருட்டில் அதுவே அவர்களுக்கு ஒளிகொடுத்தது […]
25 பெப்ரவரி, 2021 வியாழன்
? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி : உபாகமம் 6:4-12 ஆண்டவரை மறவாதே! நீ அடிமைப்பட்டிருந்த வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து உன்னைப் புறப்படப் பண்ணின கர்த்தரை மறவாதபடிக்கு எச்சரிக்கையாயிரு. உபாகமம் 6:12 தனது குழந்தைகள் கடவுள் நம்பிக்கையுள்ளவர்களாக, கடவுள் செய்த நன்மை களை மறவாதவர்களாக, தங்களுக்குக் கிடைக்கும் பொருட்களைக் கவனமாகப் பாவிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும் என்று எண்ணிய ஒரு தாயார், தனது வீட்டிலிருக்கும் பொருட்களில்; பிறர்மூலம் பரிசாகக் கிடைத்த பொருட்களின் மீது ஒரு சிகப்பு […]
24 பெப்ரவரி, 2021 புதன்
? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி : 2சாமுவேல் 9:3-11 இரக்கம் செய் அப்பொழுது அவன் வணங்கி, செத்த நாயைப்போலிருக்கிற என்னை நீர் நோக்கிப் பார்ப்பதற்கு உமது அடியான் எம்மாத்திரம் என்றான். 2சாமுவேல் 9:8 நாம் ஒரு தேவையோடு அல்லது அந்தரமான ஒரு சூழ்நிலையில் அகப்பட்டு தவிக்கும் போது, யாரோ ஒருவர், நாம் அறியாதவராக இருந்தாலும், வந்து நமக்கு உதவிசெய்யும் போது, நமது மனதுக்கு எவ்வளவு பெரிய ஆறுதலாக இருக்கிறது என்பதை […]
23 பெப்ரவரி, 2021 செவ்வாய்
? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி : மத்தேயு 6:19-21 அழியாத பொக்கிஷம் பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள். மத்தேயு 6:20 இவ்வுலகில் நாம் எமக்குப் பெறுமதியாக வைத்திருக்கும் எத்தனையோ காரியங்க ளைச் சந்தர்ப்ப சூழ்நிலையால் இழந்துபோன அனுபவம் நமக்கிருக்கலாம். அல்லது, அவை நம்மைவிட்டுத் தொலைந்தும் இருக்கலாம். அழகான ஓவியம் ஒன்றை வீட்டில் தொங்கவிட்டு, அதைப் பார்த்துச் சந்தோஷப்பட்டிருந்தபோது, அந்த ஓவியத்தில் ஒருகருமை படருவதைக் காணநேர்ந்தது. கிட்டப்போய் பார்த்தபோது, அந்த முழு […]
22 பெப்ரவரி, 2021 திங்கள்
? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி : ரோமர் 8:31-39 கிறிஸ்துவே நம்பிக்கை தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? ரோமர் 8:31 வாழ்க்கையில் தொடர்ச்சியான துன்பங்களை எதிர்நோக்கும்போது நாம் சோர்வடைந்து விடுவது இயல்பு. ஒரு பிரச்சனையிலிருந்து மீண்டெழும்போது ஒரு பெலன் எமக்குள் உருவாகிறது. ஆனால், அடுத்த பிரச்சனையை எதிர்நோக்கும்போது, ‘ஏன் இவ்விதமான வேதனைகள் எனக்கு மட்டும் நேரிடவேண்டும்” என்றதான கேள்வியும் அவநம்பிக்கையும் உருவாகிறது. இவ்விதமான சந்தர்ப்பங்களில் எமக்குள்ளிருக்கும் நம்பிக்கை […]
21 பெப்ரவரி, 2021 ஞாயிறு
? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி : லூக்கா 17:12-19 முதலிடத்தைக் கொடு அவர்களில் ஒருவன் தான் ஆரோக்கியமானதைக் கண்டு, திரும்பி வந்து, உரத்த சத்தத்தோடே தேவனை மகிமைப்படுத்தி… லூக்கா 17:15 கிறிஸ்தவரல்லாத முச்சக்கரவண்டி ஓட்டுனரோடு பேசியபோது, தான் காலையில் கோவிலில் ஒருமணி நேரம் செலவிட்டுத்தான் தனது தொழிலை ஆரம்பிப்பதாகவும், அந்நேரத்தில் யாராவது கூப்பிட்டாலும் தான் போவது கிடையாது எனவும் கூறினார். அதேவேளை ஒரு கிறிஸ்தவரை வினாவியபோது, ‘காலையில் எழுந்தால் ஜெபிக்கக் […]
20 பெப்ரவரி, 2021 சனி
? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி : லூக்கா 3:23-38 ஒரு வம்சவரலாறு ஆதாம் தேவனால் உண்டானவன். லூக்கா 3:38 தேவனுடைய செய்தி: இயேசு மனிதனாக வந்த ஆண்டவர் என்பதை லூக்கா வம்ச வரலாறு ஊடாக வெளிப்படுத்துகின்றார். தியானம்: இயேசு யோசேப்பின் மகன் என்று மக்கள் கருதினார்கள். அதன் மத்தியில், இயேசு போதிக்கத் தொடங்குகிறார். விசுவாசிக்க வேண்டிய சத்தியம்: ஆதாமின் வம்சத்தில் இயேசு மனிதனாக பிறக்க வெட்கப்படவில்லை. பிரயோகப்படுத்தல்: இயேசு தம் […]