ஜுன் 30, 2020 செவ்வாய்

? சத்தியவசனம் – இலங்கை. ??  ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி:  சங்கீதம் 31:1-7; 2கொரிந்தியர் 1:2-4 ?  ஆத்துமாவின் ஆறுதல் என் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில், உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது. சங்கீதம் 94:19 எனது வாழ்க்கையின் ஒரு காலப்பகுதியிலே தனித்துவிடப்பட்டேனோ என்ற ஒரு உள்ளுணர்வோடு போராட நேர்ந்தது. அடுத்த அடி எங்கே எப்பக்கம் வைப்பது என்று அறியாமல் திகைத்து நின்றேன். ‘நான் தடுமாறிவிழ ஏதுவாயிருக்கிறேன்; என் துக்கம் எப்பொழுதும் என் முன்பாக இருக்கிறது. […]

ஜுன் 29, 2020 திங்கள்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: சங்கீதம் 73:1-28 ? என்னைத் தாங்கிடும் கிருபை என் கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது. சங்கீதம் 94:18 நமது வாழ்க்கைப் பாதை நமக்கு எப்போதும் நியாயமானதாகவே தெரிகிறது. நமது நினைவுகளும் திட்டங்களும்கூட சரியானதாகவே தோன்றுகின்றன. வீதியிலே ஒரு சரியான நோக்கோடு நடந்துசெல்லும் ஒருவர், நினையாத நேரத்தில் பாதையிலுள்ள சிறுகுழியிலும் மண்மேடுகளிலும் கால் சிக்கி விழுந்து விடுகிறார்; […]

ஜுன் 28, 2020 ஞாயிறு

? சத்தியவசனம் – இலங்கை. ??  ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: யோபு 23:1-10 ?  என்னைத் தொடரும் கண்கள் ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார். யோபு 23:10 இந்த அறிக்கையைச் செய்த யோபு பக்தன் கடந்துசென்ற பாதை எப்படிப்பட்டது என்பதை நாம் அறிவோம். இங்கு அவர், ‘ஆனாலும்” என்று கூறுவதைக் கவனியுங்கள். அவரது அங்கலாய்ப்புகளை உணர்ந்துகொள்வார் யாரும் இருக்கவில்லை; அவர் முரட்டாட்டம் பண்ணுகிறவராகத் தன் நண்பர்களினால் கணிக்கப்பட்டார்; மனைவிகூட அவரை உதறிவிட்டாள். இந்த […]

ஜுன் 27, 2020 சனிக்கிழமை

குறிப்பு- வாசகர்களாகிய உங்களுடைய தியானத்திற்கென்று பிரதி சனிக்கிழமையை நாம் தெரிந்துள்ளோம். உங்கள் தியானத்திற்கு உதவியாக 1சாமுவேல் 25 ஐ வாசித்துத் தியானித்து, உங்கள் சிந்தனைகளை குறித்துக் கொள்ளுங்கள். நீங்களும் தியானிப்பதற்கான முயற்சிகளில் பயிற்சியெடுங்கள். பயன்பெறுங்கள். உங்கள் கருத்துக்களைத் தெரியப்படுத்துங்கள். நன்றி. – தொகுப்பாசிரியர். ? சத்தியவசனம் – இலங்கை. ??  ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி:  1சாமுவேல்  25:39-44 ?  கல்லைப்போலான இருதயம்! கர்த்தர் தாமே நாபாலின் பொல்லாப்பை அவன் தலையின்மேல் திரும்பப்பண்ணினார்… 1சாமுவேல் 25:39 ? […]

ஜுன் 26, 2020 வெள்ளி

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: சங்கீதம் 142:1-7 ?♀️  என் பாதையை அறிந்தவர் என் ஆவி என்னில் தியங்கும்போது, நீர் என் பாதையை அறிந்திருக்கிறீர். சங்கீதம் 142:3 ‘சஞ்சலமும், நெருக்கமும் என்னைச் சூழ்ந்து கொண்டிருக்கிறது; ‘நல்லது’ என்று நான் கண்டுகொண்ட வழிகளிலெல்லாம் மறைவான கண்ணிகள் என்னை விழத்தள்ளி அகப்படுத்திக் கொள்கின்றன; உதவிக்காக வலதுபுறம் திரும்புகிறேன்; என்னைப் புரிந்துகொள்வார் யாருமில்லை; இடதுபுறம் திரும்புகிறேன்; யாவும் வெறுமையாகவும் பாதுகாப்பற்றதாகவும் இருக்கிறது. நான் தனித்து […]

ஜுன் 25, 2020 வியாழன்

? சத்தியவசனம் – இலங்கை. ??  ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 2இராஜாக்கள் 2:11-14 ?  அவருடைய காலடிகளில் எலியாவின் தேவனாகிய கர்த்தர் எங்கே என்று சொல்லி …தண்ணீரை அடித்தவுடனே அது இருபக்கமாகப் பிரிந்திதினால் எலிசா இக்கரைப்பட்டான். 2 இராஜாக்கள் 2:14 ‘ஒரு சிறுவன் பின்பற்ற விரும்பும் காலடிகள், தன் தகப்பனார் நடந்து முடித்துவிட்டதாக நினைத்து மூடிவிட்ட காலடிகளாகும்” என்றார் ஒருவர். ஆனால் எலியாவின் வாழ்க்கையில் அப்படி இல்லை. எலியாவின்மேலிருந்து கீழே விழுந்த சால்வையைப் பிடித்து: ‘எலியாவின் […]

ஜுன் 24, 2020 புதன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 2இராஜாக்கள் 2:9-12 ? சுழல்காற்றின் மத்தியில் அவர்கள் பேசிக்கொண்டு நடந்து போகையில், இதோ, அக்கினி ரதமும் அக்கினிக் குதிரைகளும் அவர்கள் நடுவாக வந்து இருவரையும் பிரித்தது. 2இராஜாக்கள் 2:11 கழுகுகள் ஒரு வித்தியாசமான பறக்கும் பழக்கத்தைப் பெற்றுள்ளன. அவை புயல் வீசும்போது பெருங்காற்றைக் கண்டு பயந்து தூரமாகப் பறந்துசெல்லாமல், அதை நேருக்கு நேராக சந்திக்கும் தன்மை உடையவை. மற்றப் பறவைகள் பயந்து தூர விலகிப் […]

ஜுன் 23, 2020 செவ்வாய்

? சத்தியவசனம் – இலங்கை. ??  ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி:  2இராஜாக்கள் 2:6-10 ?  வெளிச்சம் இன்னும் பிரகாசிக்கட்டும். எலியா தன் சால்வையை எடுத்து முறுக்கித் தண்ணீரை அடித்தான். அது இருபக்கமாகப் பிரிந்தது. அவர்கள் …அக்கரைக்குப் போனார்கள். 2இராஜாக்கள் 2:8 ஆண்டவருக்குச் சேவைசெய்தல் இளைஞர்களுக்கு மட்டும் உரியதல்ல. ஜான் வெஸ்லி என்ற புகழ்பெற்ற தேவ ஊழியர், தனது 90வது வயதில் மரணமடையும் வரை பிரசங்கம் செய்தார். புளாரிடாவிலுள்ள மகதலேனா ஏரியைச் சேர்ந்த கிளாடிஸ் ஸ்டால், 82 […]

ஜுன் 22, 2020 திங்கள்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 2இராஜாக்கள் 2:1-7 ? படிப்படியாக கர்த்தர் எலியாவைச் சுழல்காற்றிலே பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப் போகிறபோது எலியா, எலிசாவோடே கூடக் …புறப்பட்டுப்போனான். 2இராஜாக்கள்  2:1 தேசிய நெடுஞ்சாலை வழியாக ஒரு மனிதன் தன் வாகனத்தை ஓட்டிச் சென்றான். திடீரென ஒரு அடர்த்தியான மூடுபனிக்குள் அகப்பட்டான். எதிரே இருப்பதை அறியமுடியாத ஆபத்தான சூழ்நிலையில், என்ன செய்யலாம் என்று அவன் திகைப்புடன் சிந்தித்தான். பெரிய விளக்குகளின் ஒளி எதிரே சாலையில் […]

ஜுன் 21, 2020 ஞாயிறு

? சத்தியவசனம் – இலங்கை. ??  ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 2 இராஜாக்கள் 1:5-17 ?  தேவன் பாதுகாக்கிறார். உடனே அக்கினி வானத்திலிருந்து இறங்கி, அவனையும் அவன் ஐம்பது பேரையும் பட்சித்தது. 2இராஜாக்கள் 1:10 இரவு நேரத்தில், முரட்டுத்தனமான போர்வீரர்கள் ஜேர்மன் நாட்டின் ஸ்லெஸ்விக் நகர வீதிவழியே சென்றனர். கடுங்குளிரின் மத்தியிலும், வீடுகளின் கதவைத் தட்டி, உள்ளே புகுந்து, சூறையாடி, மக்களைத் துன்புறுத்தியதால், மக்கள் பயத்தில் நடுங்கிக்கொண்டிருந்தனர். அந்நகாpல், ஒரு மூதாட்டி, தனது விதவையான மகள், […]

Solverwp- WordPress Theme and Plugin