? சத்தியவசனம் – இலங்கை. ??
? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 2:27-35
சிமியோனின் பாடல்
உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது லூக்கா 2:32
தேவனுடைய செய்தி:
புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், இஸ்ரவேல் ஜனங்களுக்கு மகிமையாகவும் மேசியா திகழ்வார்.
தியான பின்னணி:
தங்களை மட்டுமே மீட்க இரட்சகர் வருவார் என யூதர்கள் அன்று எதிர்பார்த்திருந்தனர். மீட்பரைக் கையில் ஏந்திய சிமியோன், ஒரு மிஷனரி, அருட்பணி பாடலையும் தீர்க்கதரிசன வார்த்தைகளையும் பொழிந்தார்.
விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:
சகல ஜனங்களுக்கு முன்பாக இயேசு பிறந்தார், வாழ்ந்தார், மரித்தார், உயிர்த்தெழுந்தார். அவரே இரட்சகர்.
பிரயோகப்படுத்தல் :
- வசனம் 30ன்படி, இதை மிஷனரி பாடல் என கூறலாமா?
- வசனம் 34-35 ல் 3 முக்கிய தீர்க்கதரிசன வார்த்தைகளைக் காணலாம். அநேகர் விழுவதற்கும் எழுவதுக்குமான கல்லாக (சங் 118:22, லூக் 20:17) அடையாளமாக, அற்புதமாக (யோவான் 20:30-31) பட்டயமாக உருவகப்படுத்தப்பட்டவர் யார் என நினைக்கிறீர்கள்?
- ‘உன் ஆத்துமாவையும்” என கூறுவதிலிருந்து யார் யாருக்கு வேதனை பாடுகள் வரப்போகின்றது?
- சிமியோனைக் குறித்து கூறப்படுவது என்ன? சிமியோர் எப்படிப்பட்டவர்? அவரோடு இருந்தது யார்? இன்று மக்கள் பரிசுத்த ஆவி இருக்கிறார் என்று கூறுவார்களாயின், அவரது செயல்பாடுகள் எப்படிப்பட்டவை? இன்று நீங்கள் எதற்காகக் காத்திருக்கின்றீர்கள்?
? இன்றைய எனது சிந்தனை:
? எமது விலாசம்
Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: Backtothebible.lk | www.Sathiyavasanam.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532
? அனுதினமும் தேவனுடன்.