? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 7:11-17

தேவனை மகிமைப்படுத்து

மகா தீர்க்கதரிசியானவர் நமக்குள்ளே தோன்றியிருக்கிறார்… தேவன் தமது ஜனங்களைச் சந்தித்தார்… தேவனை மகிமைப்படுத்தினார்கள். லூக்கா 7:16

தேவனுடைய செய்தி:

தேவன் தமது ஜனங்களைத் தேடி வந்திருக்கிறார்.

தியானம்:

ஒரே மகன் மரித்துப்போன நிலையில், அவனை அடக்கம்பண்ணும்படி, தாய் கண்ணீரோடு வந்ததைக் கண்ட ஆண்டவர், மனதுருகி, அழாதே என்று சொல்லி, மரித்த அந்த வாலிபனை தமது வார்த்தைக்கூடாக உயிரோடே எழுப்பினார். இச்செய்தி யூதேயா நாடு முழுவதிலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் பரவியது.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

மனதுருக்கமுள்ள கர்த்தர் நமது தேவைகளைச் சந்திப்பார்.

பிரயோகப்படுத்தல் :

நாயீன் ஊருக்கு இயேசுவுடன் கூட சென்றவர்கள் யார் யார்?

இயேசு கிட்டவந்து, பாடையைத் தொட்டதைக் குறித்து என்ன நினைக்கின்றீர்கள்? உண்மையான தீட்டு எது?

 “இளைஞனே, நான் உனக்குச் சொல்கிறேன், எழுந்திடு” என்ற இயேசுவின் அதிகாரம் எப்படிப்பட்டது?

மரித்தவன் உயிர்த்தெழுந்து உட்கார்ந்து, பேசத்தொடங்கியபோது மக்கள் உணர்ந்தது என்ன? என்ன செய்தார்கள்? நான் என்ன செய்திருப்பேன்?

“நம்மிடையே மகா தீர்க்கதரிசி ஒருவர் தோன்றியிருக்கிறார்.” இதன் கருத்து என்ன?

என் வாழ்வில் தேவன் செய்த நன்மை என்ன? நான் தேவனை மகிமைப் படுத்துகின்றேனா?

? இன்றைய எனது சிந்தனை:

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin