? சத்தியவசனம் – இலங்கை. ??
? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 2:7
பிரசவகாலம்
அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று,
முன்னணையிலே கிடத்தினாள்.
தேவனுடைய செய்தி:
வேதனை வேதனையாக இருக்காது, அதிலுள்ள நோக்கத்தை அறிந்தால்.
தியானம்:
தனது தகப்பனின் சொந்த ஊராகிய பெத்லகேமுக்கு, குடிமதிப்பை பதிவு செய்யும்படி யோசேப்பு, கர்ப்பவதியான மரியாளுடன் பயணம் செய்தார்.
விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:
நோக்கமற்ற வேதனை நம்மை பாரிசவாதத்திற்குட்படுத்தும்.
பிரயோகப்படுத்தல் :
- வழமையாக ஆண்களே சொந்த ஊருக்குச் சென்று பதிவுசெய்ய வேண்டும். அப்படியாயின், மரியாள் சென்றது ஏன் என நினைக்கிறீர்கள்?
- யோசேப்பும் மரியாளும் தேவனுடைய சித்தத்திற்கு கீழ்ப்படிந்தாலும், சரீர ரீதியிலும் மனரீதியிலும் பாடுகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டதுபோல், இப்பொழுது நீங்கள் முகங்கொடுக்கின்ற பாடுகள், வேதனைகள் எவை?
- வசனம் 7ன்படி, குழந்தை பிறந்தபோது அவர்கள் முகங்கொடுத்த பிரச்சனை எதுவாக இருந்தது?
? எனது சிந்தனை:
? அனுதினமும் தேவனுடன்.