? சத்தியவசனம் – இலங்கை. ??
? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 19:47-48, 20:1-8
யூத அதிகாரிகளின் கேள்வி
அது யாரால் உண்டாயிற்றோ, எங்களுக்குத் தெரியாது என்று பிரதியுத்தரம் சொன்னார்கள். லூக்கா 20:7
தேவனுடைய செய்தி:
இயேசுவுக்கு பரத்திலிருந்து சகல அதிகாரமும் கொடுக்கப்பட்டுள்ளது.
தியானம்:
எல்லா மக்களும் இயேசுவைக் கவனமாகக் கேட்டுக்கொண்டு இருந்தார்கள். இயேசு கூறிய விஷயங்களை மிகவும் உற்சாகமாகக் கவனித்தார்கள். அவர் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தபோது, யூத தலைவர்கள் அவரின் அதிகாரத்தைக் குறித்து கேள்வி கேட்டார்கள்.
விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:
தேவனால் உண்டானவற்றை நாம் விசுவாசிக்க வேண்டியது அவசியம்.
பிரயோகப்படுத்தல் :
ஜனங்களுக்கு உபதேசித்து, சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்போது இன்று நாம் முகங்கொடுக்கின்ற உபத்திரவம் எப்படிப்பட்டது? இயேசு முகங் கொடுத்த கேள்விகள் எப்படிப்பட்டது?
“நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்?” என்ற கேள்விக்கு இயேசு கொடுத்த பதில் என்ன? இக்கேள்வியைக் கேட்பதற்கான காரணம் எதுவாக இருக்கும்?
யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிருந்தும் ஏன் அவனை அவர்கள் விசுவாசிக்கவில்லை?
மனிதருக்கு அஞ்சுபவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள்?
இயேசு யாருடைய அதிகாரத்தை வெளிப்படுத்தினார்? இன்று நாம் யாருடைய அதிகாரத்தை வெளிப்படுத்த வேண்டும்?
எனது சிந்தனை:
? அனுதினமும் தேவனுடன்.