குறிப்பு-
வாசகர்களாகிய உங்களுடைய தியானத்திற்கென்று பிரதி சனிக்கிழமையை நாம் தெரிந்துள்ளோம். உங்கள் தியானத்திற்கு உதவியாக 1சாமுவேல் 26 ஐ வாசித்துத் தியானித்து, உங்கள் சிந்தனைகளை குறித்துக் கொள்ளுங்கள். நீங்களும் தியானிப்பதற்கான முயற்சிகளில் பயிற்சியெடுங்கள். பயன்பெறுங்கள். உங்கள் கருத்துக்களைத் தெரியப்படுத்துங்கள்.
? சத்தியவசனம் – இலங்கை. ??
? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 1சாமுவேல் 26:5-12
? நல்ல ஆலோசனை
நல்யோசனை உன்னைக் காப்பாற்றும், புத்தி உன்னைப் பாதுகாக்கும். நீதிமொழிகள் 2:11
? தியான பின்னணி:
சவுலைக் கொலை செய்ய தாவீது அனுமதிக்கவில்லை. தீமை செய்யாதபடி கர்த்தர் என்னைக் காக்கக்கடவர் என தாவீது கூறுகிறான். அவனை கொலை செய்ய வந்த சவுலைக்கூட கொல்லாமல் தப்புவித்தான்.
? பிரயோகப்படுத்தல் :
❓ தாவீதுக்கு தெரியும், தேவன் சவுலை அழிக்க அவனுக்கு கூறவில்லை. தேவன் சவுலை அப்புறப்படுத்துவார் என்பது அவனது எதிர்பார்ப்பு. இன்று பதவிக்கு வருவதற்கு பிழையான முறைகளை, வழிகளைக் கையாளும் நபர்களைப் பார்த்திருக்கின்றீர்களா?
❓ வசனம் 9 ஐ எப்படி விளங்கிக் கொள்கிறீர்கள்? இன்று இதை எப்படி வியாக்கியானம் பண்ணுகிறார்கள்?
❓ கர்த்தருடைய நாமத்தைப் பாவித்து, ‘பிழையான விதத்தில் தேவ வார்த்தைக்கு விரோதமாக நடக்க ஊக்குவிப்பவர்களைக் குறித்த” உங்கள் பார்வை என்ன?
❓ பிழையான விதத்தில் ஒருவர் உங்களை வழிநடத்த முற்பட்டால், நீங்கள் என்ன செய்வீர்கள்?
? தேவனுடைய செய்தி:
▪️ தீமை செய்யாதே. குறிப்பாக, தேவனுடைய மனிதனாக நடந்துகொள்.
? விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:
தேவன் அபிஷேகம் பண்ணுவித்தவர்மேல் தன் கையைப் போட்டு, குற்றமில்லாமல் போகிறவன் யார்?
? எனது சிந்தனை குறிப்பு :
__________________________________________________________________________________________________________________________________________________________________________
? அனுதினமும் தேவனுடன்.
?♂️ எமது விலாசம்
Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: Backtothebible.lk | www.Sathiyavasanam.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532