📖 சத்தியவசனம் – இலங்கை.
📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 14:12-14
இதுவும் பாக்கியமே!
அப்பொழுது நீ பாக்கியவானாயிருப்பாய்.அவர்கள் உனக்குப் பதில் செய்யமாட்டார்கள். லூக்கா 14:14
“சிறப்பு ஆசீர்வாதக் கூட்டம்” ஒரு ஆலய வளாகத்திலே சபையோருக்கு அழைப்பு விடுத்து இப்படியொரு பதாகை போடப்பட்டிருந்தது. “ஆசீர்வாதம்” இதற்காக எத்தனை ஜெபங்கள், எத்தனை முயற்சிகள் ஏன்? எது பாக்கியம், எது ஆசீர்வாதம் என்று தேவ வார்த்தை தெளிவாக தெளிவுபடுத்தியிருக்கிறது. அதன்படி வாழ்ந்தாலே போதும், ஆசீர்வாதம் நம்மை நாடி வரும்.
இயேசு ஒரு விருந்துக்கு அழைக்கப்பட்டு, வந்திருந்தார்; அங்கே ஆசீர்வாதத்தைக் குறித்து ஒரு போதனையை, தம்மை விருந்துக்கு அழைத்தவனை நோக்கியே கூறுகிறார். அவன், இவரை என்ன நோக்கத்தில் விருந்துக்கு அழைத்தானோ நாமறியோம். ஆனால் இந்த சந்தர்ப்பத்தை, விருந்து கொடுப்பதிலும் கிடைக்கின்ற ஆசீர்வாதத்தைக் குறித்துப் போதிக்க இயேசு பயன்படுத்தினார். இயேசு சொன்னபடி சிநேகிதரை, நமது சொந்த சகோதரரை, உறவினரை, வசதிபடைத்தவர்கள் என்றாலும் நமது அயலகத்தாரை விருந்துக்கு அழைக்காதிருந்தால் பகையை சம்பாதிக்கவேண்டியிருக்குமே! உண்மைதான், இதுதான் உலக இயல்பு. ஆக இதனால் என்ன நன்மை? ஒருவேளை உறவுகளைத் தக்க வைக்கலாம். அதிலும், எத்தனை விமரிசனங்ளைச் சந்திக்க வேண்டியிருக்கும். நாமும் அப்படித்தானே! அடுத்து, நம்மை அழைத்த ஒரே காரணத்திற்காகவே அவர்களையும் விருந்துக்கு அழைப்பது கடமையாகி விடுகிறது!
அதைத்தான் இயேசு குறிப்பிடுகிறார். நாம் செய்கிறவற்றுக்கு இந்த உலகத்திலேயே பலன் கிடைக்குமானால் பரலோகில் நமது பலன் என்ன? இன்று எத்தனை ஊழியங்களில், தாம் செய்கிறவற்றைப் படம் பிடித்து நவீன இணையத்தில் பிரசுரித்து, கைத்தட்டல் வாங்குவதில் மகிழ்ச்சியும் திருப்தியும் அடைகிறவர்கள் எத்தனைபேர்! இது துக்கம் அல்லவா? இயேசு சொல்கிறார், “நீ விருந்துண்ணும்போது ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் அழைப்பாயாக. அப்பொழுது நீ பாக்கியவானாயிருப்பாய். அவர்கள் உனக்குப் பதில் செய்யமாட்டார்கள்.” ஆனால், “நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் உனக்குப் பதில் செய்யப்படும்” என்று ஆண்டவர் அதன் பலனையும் சொல்லியிருக்கிறார்.
இப்படிப்பட்டவர்களுக்கு வீடுகளில் விருந்துகொடுப்பது கடினமாகத் தோன்றினாலும், அவர்களை நாடிப்போய் அவர்களுடைய பசியைப் போக்குவது மிக இலகுவான விடயமல்லவா. தனித்து இருக்கிறவர்களை நாடி, அவர்கள் வசிக்கின்ற இல்லங்களுக்குச் சென்று, அவர்களோடு நாமும் அமர்ந்து புசிப்பது எவ்வளவு மனநிறைவைக் கொடுக்கிறது. செய்வோமா!
💫 இன்றைய சிந்தனைக்கு:
இந்தப் பாக்கியம் பெற ஆயத்தமா? இதுவரை எத்தனை விருந்து கொடுத்திருப்போம்! இனி எப்படிச் செய்யப்போகிறோம்?
📘 அனுதினமும் தேவனுடன்.

Artificial intelligence creates content for the site, no worse than a copywriter, you can also use it to write articles. 100% uniqueness,5-day free trial of Pro Plan :). Click Here:👉 https://whitestudios.ru/kassa/incs/1xbet_besplatno_stavka-2021.html
Check out my website
Phone Number For Reservations:👉 http://rentry.co/ki222
Ирригатор (также известен как оральный ирригатор, ирригатор полости рта или дентальная водяная нить) – это устройство, используемое для очистки полости рта. Оно представляет собой насадку с форсункой, которая использует воду или жидкость для очистки полости рта. Ирригаторы применяются для удаления зубного камня, бактерий и насадок из полости рта, а также для смягчения любых застывших остатков пищи и органических отходов. Ирригаторы применяются для профилактики и лечения различных патологий полости рта. Наиболее распространенные ирригаторы используются для удаления зубного камня, лечения десны, профилактики и лечения воспалений десен, а также для лечения пародонтита. Кроме того, ирригаторы используются для анестезии полости рта, а также для применения антибактериальных препаратов.. Click Here:👉 https://www.irrigator.ru/irrigatory-cat.html
code promo 1xbet abidjan. Click Here:👉 https://www.aamas.org/news/1xbet_free_code_registration.html