? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 22:1-14

பஸ்கா உணவு ஆயத்தம்

பஸ்காவைப் பலியிடவேண்டிய புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாள் வந்தது. லூக்கா 22:7

தேவனுடைய செய்தி:

கர்த்தருடைய பந்திக்கு பங்குபெற எமது ஆயத்தம் அவசியமானது.

தியானம்:

பஸ்கா எனப்படும், யூதர்களின் புளிப்பில்லாத அப்பப் பண்டிகைக்குரிய காலம் நெருங்கி வந்தவேளையில், சாத்தான் யூதாஸிற்குள் புகுந்தான். பிரதான ஆசாரியனும் சேனைத்தலைவனும் பணம் கொடுப்பதாக கூற யூதாஸ் இயேசுவை காட்டிக்கொடுக்க ஆயத்தமானான்.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

தேவன் தந்த மெய்யான அப்பம் கிறிஸ்து இயேசுவே.

பிரயோகப்படுத்தல் :

வசனம் 2ன்படி, பிரதான ஆசாரியனும் வேதபாரகரும் யாருக்குப் பயப்பட்டார்கள்? ஏன் பயப்பட்டார்கள்? எதை செய்ய முற்பட்டார்கள்?

வசனம் 5ன்படி, இயேசு காட்டிக்கொடுக்கப்படுவதைக் குறித்து சந்தோஷப் பட்டவர்கள் யார்? அதற்காக அவர்கள் கொடுத்தது என்ன?

இயேசுவைக் காட்டிக்கொடுக்க சமயம்தேடிய வேளை எப்படிப்பட்டது?

வசனம் 8ன்படி, நாம் பஸ்காவைப் புசிக்கும்படிக்கு நீங்கள் போய், அதை நமக்கு ஆயத்தம்பண்ணுங்கள் என்றார் இயேசு யாருக்கு கட்டளையிட்டார்?

பஸ்கா ஆட்டுக்குட்டிகளை யூதர்கள் பலியிடுகிற நாளில் இயேசு செய்தது என்ன? அந்த ஆட்டுக்குட்டியை யாருக்கு ஒப்பிடலாம்?

அன்று எகிப்திலிருந்து இஸ்ரவேலர் விடுதலை பயணம் மேற்கொண்ட  அந்த இரவில் புளிப்பில்லாத அப்பத்தை புசித்தார்கள். இன்று நாம் எதன் நினைவாக இதை செய்கின்றோம்?

எனது சிந்தனை:

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin