ஆகஸ்ட் 7 திங்கள்

📖 சத்தியவசனம் – இலங்கை

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : 1சாமு 12:6-25

நீங்களும் உங்கள் ராஜாவும்

கர்த்தருக்குப் பயந்து, அவருடைய சத்தத்துக்குக் கீழ்ப்படிந்தால், நீங்களும் உங்கள் ராஜாவும் உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பின்பற்றுகிறவர்களாயிருப்பீர்கள். 1சாமு.12:14

வீதியிலே வாகனம் ஓட்டுவதற்கு நமக்கு சுதந்திரமும், அதற்கான அனுமதிப்பத்திரமும் உண்டு. அதற்காக, நாம் நினைத்தபடி ஓட்டமுடியாது. அதற்கென்று விதிமுறைகள் உண்டு. அதைக் கடைப்பிடிக்காவிட்டால் தண்டனை உண்டு. அந்த விதிமுறைகள், மக்களுக்கு மாத்திரமல்ல, எல்லா அதிகாரிகளுக்கும் ஒன்றுதான்.

யாக்கோபு எகிப்தில் போயிருந்த காலம் தொடக்கம், மக்கள் கர்த்தரை நோக்கிக்கூப்பிட்டபோது, கர்த்தர் அவர்களை மீட்டுக்கொண்டதை சாமுவேல் அவர்களுக்கு நினைவுபடுத்துகிறார். கர்த்தரே அவர்களுக்கு ராஜாவாயிருந்து, சத்துருக்களை மேற்கொண்டு வெற்றிகளை ஈட்டிக்கொடுத்தபோதும், இவர்கள் தங்களுக்கு ஒரு ராஜா வேண்டும் என்கிறார்கள். கர்த்தருக்கு அது துக்கத்தைக் கொடுத்தாலும், அவர்கள் கேட்ட ராஜாவை கர்த்தர் சொன்னபடி, சாமுவேல் மக்கள் முன்பாக நிறுத்திச் சொன்ன தாவது: நீங்கள் கர்த்தருடைய வாக்குக்கு விரோதமாய்க் கலகம்பண்ணாமல் கர்த்தருக்குப் பயந்து, அவரைச் சேவித்து, அவருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்தால், நீங்களும் உங்களை ஆளுகிற ராஜாவும் உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பின்பற்று கிறவர்களாயிருப்பீர்கள். “நீங்கள் இன்னமும் பொல்லாப்பைச் செய்யவே செய்வீர்களானால், நீங்களும் உங்கள் ராஜாவும் நாசமடைவீர்கள்” என்றான் (1சாமு.12:14,25). ஆம், ஒரு ராஜா ஆண்டாலென்ன, தேவனுடைய கட்டளைகளும் நியமங்களும் ஒருபோதும் மாறாது. ராஜாவும் அதற்குள் அடங்குகிறான். மேலும், “கர்த்தர் உங்களைத் தமக்கு ஜனமாக்கிக்கொள்ளப் பிரியமானபடியினால், கர்த்தர் தம்முடைய மகத்துவமான நாமத்தினிமித்தம் தமது ஜனத்தைக் கைவிடமாட்டார்” என்று தைரியம் சொல்லி, கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் கர்த்தரை முழு இருதயத்தோடும் சேவிக்கும்படி ஆலோசனையும் கூறினார் சாமுவேல்.

தேவனுடைய கட்டளைகளுக்கு யாரும் விதிவிலக்கல்ல; எந்தவொரு மனித செயலும் அவருடைய நியாயத்தீர்ப்புக்குத் தப்பவும் முடியாது. எந்த அரசாங்கம் ஆண்டாலென்ன, தேவனே மனிதனுடைய வாழ்வின் ஒவ்வொரு பகுதியையும் ஆளுகை செய்கிறவர். “கீழ்ப்படிவதற்கு அவரை நான் அறியேன்” என்று யாரும் போக்குச் சொல்லமுடியாது (ரோம.1:20). இன்று நாம் தேவனுடைய அன்பை அறிந்திருந்தும், நமது சிந்தனையில் தேவனைவிட்டு விலகி வீணராகிவிடுமளவுக்கு உலகம் பல கவர்ச்சிகளை “இது நல்லது சரியானது” என்று நம்மை மயக்கிவைத்திருக்கிறது. அதிலிருந்து விலகி, தேவனுடைய வார்த்தைக்கு அடங்கி, நமது வாழ்வில் சகல பகுதிகளையும் கர்த்தருக்குள் ஒப்புக்கொடுத்து மகிழ்ச்சியோடு வாழலாமே! ஏனெனில் வார்த்தை ஒருபோதும் மாறாது, அது சத்தியம்!

💫 இன்றைய சிந்தனைக்கு:

   தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நடப்பது என்பது எவ்வகையில் நம்மால் இயலாத விடயமாக இருக்கிறது?

📘 அனுதினமும் தேவனுடன்.

4 thoughts on “ஆகஸ்ட் 7 திங்கள்

  1. A neural network draws a woman
    The neural network will create beautiful girls!

    Geneticists are already hard at work creating stunning women. They will create these beauties based on specific requests and parameters using a neural network. The network will work with artificial insemination specialists to facilitate DNA sequencing.

    The visionary for this concept is Alex Gurk, the co-founder of numerous initiatives and ventures aimed at creating beautiful, kind and attractive women who are genuinely connected to their partners. This direction stems from the recognition that in modern times the attractiveness and attractiveness of women has declined due to their increased independence. Unregulated and incorrect eating habits have led to problems such as obesity, causing women to deviate from their innate appearance.

    The project received support from various well-known global companies, and sponsors readily stepped in. The essence of the idea is to offer willing men sexual and everyday communication with such wonderful women.

    If you are interested, you can apply now as a waiting list has been created.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Solverwp- WordPress Theme and Plugin